முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் John Tory அவர்களின் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதிக்கு சென்ற அவர் மலர்வளையம் வைத்து சுடரேற்றியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த வியஜத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். …
Read More »அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை
அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் மக்களைச் சென்றடையாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை முதலமைச்சர் இன்றையதினம் நேரில் சென்று சந்தித்து …
Read More »இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர்
இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதே வேளை நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமர் காலியில் நெலும் ஹப்பிட்டிய ரிதிதரு இளைஞர்களினால் …
Read More »பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 – OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ விருப்பம் தெரிவிப்பு
பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 – OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ விருப்பம் தெரிவிப்பு இலங்கையில் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின வைபவத்திற்கு சமகாலத்தில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 –OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவுவதற்கு விருப்பம்ம தெரிவித்துள்ளது. அதன் தலைவரும் அவுஸ்திரேலிய ஒரியன்டல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருமான Jun Hong Lu உள்ளிட்ட …
Read More »பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம்
பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி, தமது திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் …
Read More »கப்பம் இன்றி விடுவிப்பட்டது இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல்
கப்பம் இன்றி விடுவிப்பட்டது இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் இருந்த எட்டு இலங்கையர்களும் கப்பம் இன்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கப்பல் தலைவர் நிக்கலஸ் அந்தோனி தெரிவித்துள்ளார். சோமாலிய படையினருக்கும், கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து எட்டு இலங்கை பணியாளர்களும், கப்பலும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்களுக்கு சோமாலிய அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்கவும் இணங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
Read More »திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு
திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு திருகோணமலையில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், குறித்த பிரதேசத்தில் நான்கு வைத்திய நிபுணர்களை உள்ளிடக்கிய 23 பேர் கொண்ட விசேட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். …
Read More »சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைக்க நிதி ஒதுக்கீடு
சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைக்க நிதி ஒதுக்கீடு சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைப்பதற்கு 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மீள்குடியேற்ற அமைச்சு மேற்படி நிதியை வழங்கியுள்ளது. வலிகாமம் மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை கடைத் தொகுதிக்கும், சந்தைக்குமான திட்டங்கள் மக்களால் கடந்த பல ஆண்டுகளாக …
Read More »இயற்கையை நாம் அழித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்
இயற்கையை நாம் அழித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் இயற்கையை நாம் அழிவுறச் செய்தால் அதன் விளைவால் ஏற்படும் அழிவையும் நாமே எதிர்க்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பாதுகாப்பான இலங்கை எனும் தொனிப்பொருளின் கீழ், மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன்கோயில் வீதியில் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் 12.5 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) இன்று …
Read More »தமிழர்களின் போராட்டங்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் ஒப்பிடாதீர்
தமிழர்களின் போராட்டங்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் ஒப்பிடாதீர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் மேற்கொள்ளும் நியாயமான போராட்டங்களை தென்னிலங்கையில் கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் போராட்டங்களுடன் ஒப்பிட வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் அரச காணிகளை தமக்கு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும், பூர்வீகமாக தாம் வாழ்ந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறு வலியுறுத்தியே போராடுவதாகவும் …
Read More »