Tuesday , June 24 2025
Home / தமிழ்மாறன் (page 110)

தமிழ்மாறன்

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம்

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு தேவையான குடிநீர் விநியோகத்துக்காக இந்திய அரசாங்கத்தினால் தண்ணீர் பௌசர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்தினால் 08 தண்ணீர் பௌசர்கள் குறித்த தண்ணீர் பௌசர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டன. 16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சி காரணமாக …

Read More »

கேப்பாபுலவு காணிகளுக்கு இரண்டு தினங்களில் தீர்வு

கேப்பாபுலவு காணிகளுக்கு

கேப்பாபுலவு காணிகளுக்கு இரண்டு தினங்களில் தீர்வு கோப்பாபுலவு காணிகள் தொடர்பில் இரண்டு தினங்களில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளில் 43 கைதிகளே இன்னும் விடுவிக்கப்படாமலுள்ளனர். இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணையை முன்னெடுத்த பின்னரே அவர்களை விடுவிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான சபை …

Read More »

விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலு ஆராச்சியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் …

Read More »

இந்து சமய பாடத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை திருத்த விசேட குழு

இந்து சமய பாடத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை

இந்து சமய பாடத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை திருத்த விசேட குழு இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் வகையில் புதிய குழு ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார் இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கல்வி இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த …

Read More »

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு இந்திய மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசு சார்பிலான ஒத்துழைப்புகள் தாமதிக்கப்படுவதாக கடற்படைப்பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாக்குழுகே குற்றம் சாட்டியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவதினத்தன்று இந்திய மீனவர்கள் பயன்படுத்திய ஜீ.பி.எஸ்.உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களை ஸ்ரீலங்கா கடற்படைக்கு பெற்றுத்தருமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தியா இதுவரை அத்தகவல்களை வழங்காமையினால் விரிவான …

Read More »

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன்

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு வன்னியில் இடம்பெற்ற மூன்றுதசாப்தகால போரில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான தி ஐலண்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் …

Read More »

நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை

ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா

நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீது நாளை புதன்கிழமை விவாதம் நடைபெறும்போது, அரச தரப்புக் குழுவுக்கு பிரதி வெளிவிவாகர அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் இன்று ஜெனிவா நோக்கி புறப்பட உள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் …

Read More »

திருமலை அபிவிருத்தி கூட்டத்ததில் டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட தீர்மானம்

திருமலை அபிவிருத்தி கூட்டத்ததில் டெங்குவை

திருமலை அபிவிருத்தி கூட்டத்ததில் டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட தீர்மானம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசஅதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களான நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்×ப் ஆகியோரின் பங்கு …

Read More »

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திருப்பம்

லசந்த விக்ரமதுங்க கொலை

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திருப்பம் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் தலையில் தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தெஹிவளை …

Read More »

கர்ப்பிணி பெண் பலி

கர்ப்பிணி பெண் பலி

கர்ப்பிணி பெண் பலி கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிகக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாள ஒருவர் தெரிவித்தார். கர்ப்பிணியான குறித்த பெண்ணின் சிசுவை மீட்கும் நோக்கில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளதாகவும், தாயார் இன்று உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் …

Read More »