மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சிவராத்திரி வளைவு உடைக்கப்பட்டதையும், நந்திக்கொடியை காலால் மிதித்ததையும் கண்டித்து நேற்று மன்னாரில் அமைதி வழியில் பேரணி, கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் ஆலடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்று கூடியவர்கள், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு அமைதிப் பேரணியாக சென்றனர். மாவட்ட செயலகத்திற்கு எதிராக, வீதியின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் பதாதைகளையும் ஏந்தியபடி, அமைதி வழியில் எதிர்ப்பை தெரிவித்தனர். மன்னார் மாவட்ட இந்து குருமார் …
Read More »ரணிலுக்கு ஆபத்தா ?
நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பின்போது இரண்டு அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைந்தன. வஜிர அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்நாட்டு விவகார, மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகளே தோல்வியடைந்தன. நேற்று இந்த அமைச்சுக்கள் மீதான விவாதம் நடைபெற்றது. மாலையில் ஆளுந்தரப்பில் உறுப்பினர்கள் குறைவாக இருந்த சமயத்தை பயன்படுத்தி, எதிரணியின் ரஞ்சித் சொய்சா எம்.பி, வாக்கெடுப்பை கோரினார். …
Read More »மகிந்தவின் முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த சந்திரிக்கா
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டில் நிலவும் மின்சாரப் பிரச்சினை தொடர்பில் திடீர் கருத்துத் வெளியிட்டுள்ளனர். மேற்படி 2015, 2017 ஆம் ஆண்டுகளில் சம்பூரில் அமைக்கப்படவிருந்த மின் உற்பத்தி நிலையங்களை தற்போதைய அரசாங்கம் அமைக்காததன் பிரதிபலனையே இன்று எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தமது காலத்தில் மாத்திரமே சிக்கல் இன்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த …
Read More »இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை …
Read More »இன்றைய ராசிபலன் 29.03.2019
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். முன்கோபத்தை குறையுங்கள். …
Read More »இன்றைய ராசிபலன் 28.03.2019
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.பழைய பகை, கடன் நினைத்து …
Read More »இன்றைய ராசிபலன் 27.03.2019
மேஷம்: மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. உங்க ளுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் …
Read More »இன்றைய ராசிபலன் 26.03.2019
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் …
Read More »தடையை மீறி சின்மயிக்கு நான் வாய்ப்பு தருகிறேன்: அறிவித்த பிரபலம்
டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்திலும் பாடவோ டப்பிங் பேசவோ இல்லை. சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீது இதுபற்றி சின்மயி தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் தடையை மீறி சின்மயிக்கு பாட வாய்ப்பு தரப்போவதாக தெரிவித்துள்ளார். https://twitter.com/govind_vasantha/status/1109829521153224704
Read More »நடு வீதியில் திடீரென பற்றி யெரிந்த முச்சக்கர வண்டி
முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 தாமரைத்தடாகத்திற்கு அருகிலுள்ள வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »