Wednesday , August 27 2025
Home / அருள் (page 291)

அருள்

‘பதஞ்சலி, ‘பிராண்டு’ மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உயரும்’

புதுடில்லி : ”அடுத்த ஐந்து ஆண்டுகளில், பதஞ்சலி நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2 லட்சம் கோடி டாலராக உயரும்,” என, அதன் நிறுவனர், பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அவர், மேலும் கூறியதாவது:பதஞ்சலி, நுகர்பொருட்களுடன், புதிய துறைகளிலும் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பூங்காக்கள் அமைப்பது, தயாரிப்பு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உள்ளது. இரு ஆண்டுகளில், நிறுவனத்தின் தயாரிப்பு திறன், 1 லட்சம் …

Read More »

போர்க்குற்றச்சாட்டு: ஐ.நாவுடன் பகிரங்க விவாதத்துக்கு தயார்! – இலங்கை இராணுவத் தளபதி அறிவிப்பு

“இலங்கைப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” இவ்வாறு  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்தார். கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “இராணுமானது எவ்வாறு ஒழுக்க விழுமியத்துடன் …

Read More »

அத்தியாவசியப் பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு! – அரசு அறிவிப்பு

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார். நாட்டில் திடீரென ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டால் சந்தையில் அரிசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் …

Read More »

ரோஹிங்யா முஸ்லிம்களை அரசு கைவிடவே கூடாது! – மஹிந்த தெரிவிப்பு

“அகதிகளாக வந்தவர்களை நாம் கைவிடக்கூடாது: அது இலங்கையின் கலாசாரமும் அல்ல. எனவே, சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டிருக்காது அந்த மக்களை அரசு பாதுகாக்கவேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தஞ்சம் புகுந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றிவளைத்த குழுவொன்று அவர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டதுடன், அடாவடிச் செயலிலும் ஈடுபட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் வினவியபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் …

Read More »

முள்ளிவாய்க்காலில் படை வசமுள்ள நிலத்தை விடுவிக்க வலியுறுத்துவேன்! – வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்

“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில், இராணுவத்தினரின் வசமுள்ள கடற்கரையோரம் உட்பட்ட சுமார் 25 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு, முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்துவதோடு, இவ்விடயம் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டுவரவுள்ளேன். – இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். “யுத்தத்துக்கு முன்னரான காலப்பகுதியில், மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்த முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப் பகுதி உட்பட25 ஏக்கர் …

Read More »

பத்து வருடங்களாக சிறையில் வாடிய அரசியல் கைதி 3 வழக்குகளிலிருந்து விடுதலை!

வத்தளை, எலகந்தைப் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்று நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிய சதித் திட்டம் தீட்டினார் என்பது உட்பட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மூன்று வழக்குகளை எதிர்கொண்டகிளிநொச்சி இளைஞரொருவர் கடந்த சுமார் பத்து ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நிலையில், அவரது சட்டத்தரணியான கே.வி.தவராஜாவின் வாதத்தையடுத்து மூன்று வழக்குகளிலிருந்தும் விடுதலைசெய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயராம் இராமநாதனுக்கு எதிராக …

Read More »

பேய் கதையில் மிரட்ட வரும் நடிகை ஓவியா

யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஓவியா இணைந்து நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து நாயகனாக ஆதி சாய்குமார் நடிக்கிறார். டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக ஓவியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். விரைவில் துவங்க உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏற்கனவே சந்தோஷ் …

Read More »

பிக்பாசின் இரண்டாம் சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைய உள்ளது. அதுபோல தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக முடிந்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்றும் அதனை யார் தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்ப …

Read More »

மிகப்பிரமாண்டாமாய் பிக்பாஸ் இறுதி போட்டி..! நடிகர் விஜய் பங்கேற்பு..! ஏற்பாடுகள் தீவிரம்…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதி போட்டியை மிகப்பிரமாண்டமாய் நடத்த விஜய் டிவி முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இளையதளபதி விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கலந்து கொண்டு பிக்பாஸ் பட்டத்தை வெல்பவருக்கு பரிசு வழங்குகிறார். மேலும் அவர் நடித்த மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாகவும் இது அமையும். அவருக்கு எதாவது …

Read More »

சென்ற போன் கால்… கதவை தட்டிய ஓவியா.. அதிர்ச்சியில் லாரன்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புதிய உச்சத்தை எட்டியுள்ள ஓவியாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ராகவா லான்ரன்ஸ் இயக்கி நடிக்கவிருக்கும் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் தற்போது ஓவியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஓவியா மற்றும் லாரன்ஸ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. காஞ்சனா மூன்றாம் பாகம் தொடர்பாக நடிகை ஓவியாவுக்கு லாரன்ஸ் அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. அப்போது …

Read More »