Wednesday , August 27 2025
Home / அருள் (page 282)

அருள்

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிக்கும் படத்தின் புகைப்படம்..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த பாடலுக்கு விஷ்ணு மற்றும் ஓவியா நடனம் ஆடியுள்ளனர். பாடல் படப்பிடிப்பின் …

Read More »

ஜூலியை விட காயத்ரி நல்லவர் – ஓவியா!

ஜூலியை விட காயத்ரி நல்லவர் என்றும் காயத்ரி நன்றாக கவனித்துக்கொள்ளக்கூடியவர் என்றும் பிக் பொஸ் புகழ் நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட, அவரிடம் நீங்கள் ஒரு நாளை செலவிட விரும்பினால் காயத்ரி, ஜூலி இவர்களில் யாருடன் செலவிடுவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜூலி எப்பவும் ஒரே மாதுரியாகவும் அசமந்த போக்குடனும் இருப்பார் என்றும் நன்றாக மனம் விட்டு பேசக்கூடியவர் …

Read More »

இலங்கை – இந்தியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி!

இந்தியா – இலங்கை இராணுவத்தினர் எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். பூனேயில் நடைபெறும் இக்கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இன்றைய தினம் இலங்கையிலிருந்து இராணுவக் குழாமொன்று இந்தியா சென்றுள்ளது. எதிர்க்கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கான கூட்டு மூலோபாயங்களை உருவாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது அளிக்கப்படவுள்ளன. இரு நாடுகளிலும் இராணுவ நடைமுறைகளை சிறந்த முறையில் பரிமாறி, இரு இராணுவங்களுக்கிடையே ஒரு …

Read More »

உணவு ஒவ்வாமை காரணமாக 200 பேர் கண்டி வைத்தியசாலையில்!

கண்டி, ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, இன்று காலை கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னரே, இவ்வாறு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Loading…

Read More »

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க! – மைத்திரிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மேலும் தாமதமின்றி உடன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவசர கடிதம் எழுதியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பிலும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் …

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்: பதிலைத் தந்துவிட்டு யாழ்ப்பாணம் வருக!

“உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அவற்றைப் புறந்தள்ள முடியாது. நாளைமறுதினம் சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வர இருக்கின்றார். அவர் தனது வருகைக்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல ஒரு பதிலைத் தரவேண்டும். பதிலைத் தந்துவிட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும். இதுவே யாழ்ப்பாண ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.” – இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட வணிகர் கழகம் தெரிவித்தது. இது தொடர்பில் …

Read More »

யாழ்ப்பாணம், மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியா நுளம்பு!

மன்னார், யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி பவானி தெரிவித்தார். மலேரியா நுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தலைமன்னாரில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் நுளம்புக் குடம்பிகள், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 19 கிணறுகளில் சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை வவுனியா …

Read More »

ஒருசில சாட்சிகளுக்காக வேறு நீதிமன்றுக்கு வழக்கு மாறுவது சட்டப்படி கண்டனத்துக்குரியது!

“சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது சட்டப்படி கண்டனத்திற்குரியது. ஒன்றரை இலட்சம் படையினர் வடக்கு மாகாணத்தில் குடிகொண்டிருக்கும்போது சாட்சிகள் பயந்து வரத் தயங்குகின்றார்கள் என்பது நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது. சாட்சிகளைப் பொலிஸாரே மன்றுக்குக் கொண்டுவந்து திரும்பவும் கொண்டுபோய் அவர்களது வதிவிடங்களில் சேர்ப்பிக்கமுடியும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘ஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில்’ என்ற தலைப்புடன் அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “தமிழ் அரசியல் கைதிகள் …

Read More »

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் நாளை போராட்டம்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கொழும்பிலும் நாளை வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்னால் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். Loading…

Read More »

போர்க்குற்றத்துக்குச் சான்றான முள்ளிவாய்க்காலில் பப்லோ!

நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேடஅறிக்கையாளர் பப்லோ டி கிறிப் இன்று வடக்குக்குச் சென்றார். இதன்போது அவர், இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்குச் சான்றான இடமான முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அங்குள்ள தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்டார். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார். அதேவேளை, …

Read More »