Tuesday , August 26 2025
Home / அருள் (page 101)

அருள்

மன்னாரில் கிளைமோர் குண்டு மீட்பு

மன்னார் நகர் பகுதியில் ஆபத்தான கிளைமோர் குண்டு ஒன்றினை மன்னார் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். மன்னார் – பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன் சந்தை பகுதிக்கு செல்லும் பிரதான பாதை சந்தியிலிருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை ஊழியர்களினால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குப்பைக்குள் இருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 3 கிலோ கிராம் நிறையுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் …

Read More »

கொழும்பில் சிக்கிய 700 கோடி ரூபா பெறுமதியான பொருள்!

கொழும்பை அண்மித்த பகுதியில் வைத்து மிகப் பெரிய பெறுமதியுடைய இரத்தினகல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மன்னன் மதுஷின் சகாக்களை தேடும் விசேட நடவடிக்கையின் போது குறித்த நபர் சிக்கியுள்ளார். பன்னிப்பிட்டிய, ஆரவ்வல பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் இரத்தினகல் மீட்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை கெசெல்வத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட இரத்தினகல்லின் பெறுமதி 500 …

Read More »

பாதுகாப்பு படைக்கு ஏன் 393 பில்லியன்! சிறிதரன்

நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதாக கூறிக்கொண்டு பாதுகாப்பு படைக்கு ஏன் 393 பில்லியன் ஒதுக்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பினார். வடக்கு கிழக்கில் திறந்த வெளி சிறைச்சாலையில் மக்களின் சொந்த நிலைகளை விடுவிக்க முடியாத, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இராணுவத்தை ஏன் பலப்படுத்த வேண்டும். சமாதான காலத்தில் ஏன் பாதுகாப்புக்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்ட வேண்டும். ஆகவே இது யுத்த …

Read More »

ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட விசேட அறிவிப்பு

உண்மையான நாட்டுப்பற்றுள்ள அரசியல்வாதிகள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளின் சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் , தேர்தல் வருடமான இவ்வருடத்தின் முதல் தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறக்கூடும் எனவும் , தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும் போது பொதுத்தேர்தல் அதற்கு முன்னர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக …

Read More »

இன்றைய ராசிபலன் 06.03.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோர் உங்களின் புது முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். புதுத் தொழில்  தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: உணர்ச்சிப் பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்  பேசுவீர்கள், செயல்படு வீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர் …

Read More »

இன்றைய ராசிபலன் 05.03.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள். ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக்  கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் …

Read More »

இன்றைய ராசிபலன் 04.03.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள். ரிஷபம்: கணவன்- மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் …

Read More »

திருப்பதியில் எடைக்கு எடை தங்கம் வழங்கிய பிரதமா் ரணில்!

திருப்பதி தாிசனத்திற்கு சென்றிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதி காலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையான் தாிசனத்தில் ஈடுபட்டதுடன் தனது உடல் எடைக்கு நிகரான தங்கத்தை வழங்கியிருக்கின்றாா். இந்த தரிசனத்துக்காக நேற்று மாலை திருப்பதிக்கு சென்ற பிரதமர், அவரது பாரியார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏ ழுமலையானை தரிசித்துள்ளார். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்திற்காக ஏழுமலையான் ஆலய முன் வாசல் வழி யாக …

Read More »

இலங்கையில் சிறந்த தலைமைத்துவம் இல்லை!

நாட்டில் தற்போது சிறந்த தலைமைத்துவம் இல்லை என்று தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கடந்த காலங்களைவிட நாட்டில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் நிலவிய யுத்தத்தை எக்காலத்திலும் நிறைவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது என்றும் கூறினார்கள். …

Read More »

20 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்!

ஜே.வி.பி.யின் தனிப்பட்ட விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொண்டுவரப்படும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாம் ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவளிக்க நாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற …

Read More »