Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாடாளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்!

நாடாளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்!

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே மீளப்பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக் கொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ ஜனாதிபதிக்கே சட்ட ரீதியான அதிகாரம் கிடையாது.

அரசியல் அமைப்பிற்கு அமைவாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமையவும் நாடாளுமன்றை கலைத்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையிலும் பின்பற்றப்படும் இலத்தின் சட்டக்கோட்பாடுகளின் ஒன்றான பென்டுக்ஸ் ஒபிசீயா என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய முடியாது.

உயர் நீதிமன்றில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது மட்டுமே இந்த சட்டப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

எனினும், சட்ட மா அதிபரும் ஏனைய தரப்பு சட்டத்தரணிகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு உயர் நீதிமன்றில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்“ என தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv