Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி!

சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி!

சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி!

சபைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபைத் தலைவர் பதவியிலிருந்தே பிரதமரை நீக்க தீர்மானிக்கப்பட்டுளது.

குறித்த விகாரையின் பெரும்பான்மையினர் இதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் களனி ரஜா மகா விகாரையின் பங்களிப்பாளர் சபை கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விகாராதிபதி சங்கைக்குரிய பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்கரக்‌கித தேரரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் சாவிக்ரமசிங்கவை பங்களிப்பாளர் சபைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஆதரவாக 100 இற்கும் அதிகமானோரின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் , 07 பேர் குறித்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எனினும், களனி ரஜ மகா விகாரையின் பங்களிப்பாளர் சபையின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv