Wednesday , August 27 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / புளோரிடாவில் துப்பாக்கி சூடு : 17 பேர் பலி, 50 பேர் படுகாயம்

புளோரிடாவில் துப்பாக்கி சூடு : 17 பேர் பலி, 50 பேர் படுகாயம்

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் முகமூடியுடன் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் 19 வயதான முன்னாள் மாணவர் Nicolas de Jesus Cruz என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒழுக்கமின்மை காரணமாக குறித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இந்த கொடூர தாக்குதலை அவர் முன்னெடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் விசாரணைக்கு பின்னரே உறுதியான தகவல்கள் வெளிவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா மாகாணத்தின் Parkland பகுதியில் அமைந்துள்ள Majory Stoneman Douglas உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த நபர் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv