Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 30 நாள்­க­ளுக்­குள் 6,203 பேருக்கு டெங்கு!!

30 நாள்­க­ளுக்­குள் 6,203 பேருக்கு டெங்கு!!

நாட்­டில் மீண்­டும் டெங்­கு­நோய் தீவி­ர­மாகப் பர­வி­ வ­ரு­கின்­றது. ஜன­வரி மாதத்­தில் மாத்­தி­ரம் 6 ஆயி­ரத்து 203 பேர் டெங்­கு­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று சுகா­தார அமைச்­சின் தொற்­று­நோய் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­துள் ளது.

இடை­யி­டையே பெய்­யும் மழை கார­ண­மா­கவே டெங்­கு­நோய் வேக­மாகப் பரவ ஆரம்­பித்­துள்­ளது என்று சுட்­டிக்­காட்­டப்­பட் டுள்­ளது. டெங்கு நுளம்பு பெரு­காத வகை­யில் சுற்­றா­டலை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ளு­மாறு மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த ஆண்டு இலங்­கைக்கு டெங்கு நோயால் பெரும் அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டது. சுமார் ஒரு இலட்­சம்­பேர் வரை­யா­னோர் பாதிக்­கப்­பட்­ட­னர். அதன்­பின்­னர் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்கை தீவி­ரப்­ப­டுத் தப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­ டத்­தக்­கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv