Sunday , June 29 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / வட கொரியாவுக்கு மிரட்டல்: கொரிய தீபகற்பத்தின் மீது சீறிப் பாய்ந்த அமெரிக்க போர் விமானங்கள்

வட கொரியாவுக்கு மிரட்டல்: கொரிய தீபகற்பத்தின் மீது சீறிப் பாய்ந்த அமெரிக்க போர் விமானங்கள்

வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன.

வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன.

ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அது அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ராணுவ தளத்தை தாக்க குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக சர்வதேச போர்க்கலை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் நேற்று வட கொரியா கடல் எல்லைக்கு மேலே வட்டமிட்டு பறந்ததாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …