Tuesday , May 21 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு

தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு

3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

ஆண்கள் பிரிவில் நிதின் சிதானந்த் (200 மீட்டர் ஓட்டம்), ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), கமல்ராஜ் (டிரிபிள் ஜம்ப்), சந்தோஷ் மணிகண்டன் (உயரம் தாண்டுதல்) ஆகியோரும், பெண்கள் பிரிவில் சுபா (200, 400 மீட்டர் ஓட்டம்), கிரேசினா மேரி (உயரம் தாண்டுதல்), புனிதா (நீளம் தாண்டுதல்), பிரியதர்ஷினி (டிரிபிள்ஜம்ப்), காருண்யா (வட்டு எறிதல்) ஆகியோரும் தேர்வாகி இருக்கிறார்கள்.

Check Also

2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்.

கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ சமீபத்தில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின். …