“வீடு என்றால் ஆயிரம் சண்டை இருக்கும். சாதாரண சண்டைக்காக உடனே எவரும் வெளியேறமாட்டார்கள். டிசம்பர் மாத இறுதியில் தேசிய அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து இருக்குமா? இல்லையா? என்று அறிவிப்போம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய அரசில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலர் விலகவுள்ளனர் என்று பல தரப்பும் கருத்து வெளியிட்டு வருகின்றன. பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமே. வீடு என்றால் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். அதற்கான சிறிய பிரச்சினையொன்று ஏற்பட்டவுடன் எவரும் உடனே வீட்டைவிட்டு வெளியேறிவிடமாட்டார்கள்.
இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையிலேயே கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய அரசை அமைத்தோம். எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தேசிய அரசின் ஒப்பந்தம் தொடரும். அதற்குப் பின்னர் தேசிய அரசில் நாங்கள் தொடர்ந்து பயணிப்பதா? இல்லையா? என்ற முடிவை அறிவிப்போம்” – என்றார்.