தமிழக அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் எனக் கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் எப்போதும் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. தினகரனின் குடும்ப …
Read More »இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை
பாக்கெட் செய்யப்பட்ட இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இட்லி மாவு 18 சதவிகித வரி பிரிவில் வரும் நிலையில், இதை 12 சதவிகித பிரிவில் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வறுகடலைக்கான ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதோடு சாம்பிராணி, களிமண் சிலைகள், பிரார்த்தனை மெத்தை ஆகியவற்றுக்கான வரியையும் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எஸ்யுவி …
Read More »எம்எல்ஏக்களை ஒளித்து வைப்பவர்கள் ஒழிக்கப்படுவார்கள்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வரத்தயாராக இருந்த எம்எல்ஏக்களை கடத்திச் சென்று ஒளித்து வைத்தவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன் ‘இது நமது ஆட்சி. இந்த ஆட்சிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் பங்கம் வராது. ஆட்சி செய்பவர்களுக்கு மடியிலே கணம் உள்ளது. ராணுவ …
Read More »38 பில்லியனா? ஷாக் கொடுத்த மின் கட்டணம்!
வழக்கமாக வீடுகளுக்கு மின்சார கட்டணம் எவ்வளவு வரும்? அதிகப்பட்சமாக சில ஆயிரங்களுக்குள்தான் . ஆனால், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த குஹாவுக்கு எகிறி இருக்கிறது இக்கட்டணம். இதையடுத்து வீட்டில் மின்சாரத்தை திடீரென்று துண்டித்துவிட்டார்கள். ஏன், என்னாச்சு என்று மின்வாரியத்தில் விசாரிக்க சென்ற குஹாவுக்கு ஷாக். ஏனென்றால் கட்டணம் ரூ.38 பில்லியனை கட்டாததால்தான் மின்சாரத்தைத் துண்டித்ததாகக் கூறியுள்ளனர். இதுபற்றி குஹா கூறும்போது, ‘மூன்று அறைகள் கொண்ட எனது வீட்டில் 3 ஃபேன்கள், …
Read More »சூனியக்காரி என்று பெண் அடித்துக்கொலை
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ளது கெர்கி. இங்கு வசித்து வந்தவர் கன்யா தேவி. வயது 40. இவரது கணவர் ஒரு மாதத்துக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து மகன் மற்றும் மகளுடன் வசித்துவந்த அவரை, உறவினர்கள் சூனியக்காரி என்ற கூறினர். இதையடுத்து அவரை அடித்துக் கொடுமைப் படுத்தி, மனிதக் கழிவை சாப்பிட வைத்தனர். பின்னர் சாகும்வரை அடித்தேக் கொன்று எரித்துவிட்டனர். இந்தச் சம்பவம் கடந்த 3-ம் தேதி நடந்துள்ளது. இது …
Read More »சுதந்திர தின விழா ஒத்திகை
சுதந்திர தினவிழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி ராஜபாதையில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும், முழுச் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் நடத்திப் பார்த்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை, தூதரகங்கள் உள்ளி்ட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு …
Read More »மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு?
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். இவர்கள் தரவரிசை பட்டியலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 86ஆயிரத்து 355 இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வில் …
Read More »இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் களமிறக்கப்படுகிறது!
எதிரிகளுடன் சண்டையிட இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் நம் ராணுவ வீரர்கள் இரவு பகலாக போராடிவருகின்றனர். இதனால் ஏற்படும் உயிர்சேதங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளுக்காக எல்லையில் ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது. இதையடுத்து ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 544 ரோபோட்கள் தேவைப்படுவதாக …
Read More »தொலைபேசி உரையாடல், வாட்ஸ் அப்-ஐ கண்காணிக்க மத்திய அரசின் தொழில்நுட்பம் ரெடி!
இந்தியாவில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளையும் கண்காணிக்க மத்திய அரசு தொழில்நுட்பம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள் போன்ற அனைத்தையும் கண்காணிக்க முடியும். இதற்காக நாடு முழுவதும் 20 இடங்களில் மத்திய கண்காணிப்பு மையங்கள் செயல்படத்துவங்கிவிட்டன. கூடுதலாக ஒரு கண்காணிப்பு மையமும், இந்த மையத்துக்கான பேரழிவு மீட்புக்குழு ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயலுக்கு வர …
Read More »ஓஎன்ஜிசி குறித்து அதிகாரிகள் விளக்கம்!
ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஒஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கும்பகோணத்தில் ஒஎன்ஜிசி நிறுவன மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது, ஓஎன்ஜிசி மீது தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எரிசக்தி தேவை நிறைவேற்றப்பட்டல்தான் நாடு முழுமையாக வளர்ச்சி அடையும் என்று கூறிய அவர், போராட்டக்காரர்கள் தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கி …
Read More »