Monday , June 17 2024
Home / Tag Archives: India news (page 20)

Tag Archives: India news

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க …

Read More »

பொது மக்களை நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்

பொது மக்களை சசிகலா

பொது மக்களை நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார் பொதுமக்கள் முன்பாக எந்த பொதுக்கூட்டத்திலும் பேசாமல், மக்களை ஒரு முறை கூட நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் …

Read More »

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன்

சிவசக்தி ஆனந்தன்

காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த 25.ஆம் திகதி தமது காணிகளை விடுவிப்பதாக அரசாங்க …

Read More »

ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர

ஜெனிவாவில் இலங்கை மங்கள சமரவீர

ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஜெனிவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. …

Read More »

சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதந்திரதின நிகழ்வில்

சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஸ்ரீலங்காவின் இந்த வருட சுதந்திரதின நிகழ்விலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொதுபல சேனா, சிங்ஹலே போன்ற பேரினவாத …

Read More »

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது

மைத்திரி

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது முப்பது வருடகால யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன், பொருளாதார விடுதலையை நோக்கியே நாம் தீர்மானத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம். இதனாலேயே 2017ஆம் ஆண்டினை நாம் வறுமையை இல்லாதொழிக்கும் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளோம். சர்வதேச ஆதரவையும், நன்மதிப்பையும் …

Read More »

ஆப்கானிஸ்தானில் 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தானில் 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொலை ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொன்றனர். ஆப்கானிஸ்தானில் பர்யாப் மாகாணம் அல்மார் மாவட்டத்தில் சோதனை சாவடி உள்ளது. நேற்று அதன் அருகே 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பிணத்தைக் கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொல்லப்பட்ட அனைவரும் …

Read More »

கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்றைய தினம் ஒன்று கூடுகின்றது. கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, வெளியாகியுள்ள எல்லை நிர்ணய சபையின் …

Read More »

ரஷியாவுக்கு கடும் கண்டனம் – அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி பேச்சு

ரஷியாவுக்கு

ரஷியாவுக்கு கடும் கண்டனம் – அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி பேச்சு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு பேசினார். அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் கிரிமியா தீபகற்ப பகுதி, பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைந்து விட்டது. இதே போன்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கிற ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், தனி நாடு கோரிக்கையை எழுப்பி கிளர்ச்சியில் …

Read More »

கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர்

வடமாகாண முதலமைச்சர்

கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.                            

Read More »