Tuesday , June 10 2025
Home / Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (page 3)

Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை மீது ஐ.நா. உன்னிப்பான கவனம்! – சம்பந்தனிடன் எடுத்துரைத்தார் ஜெப்ரி பெல்ட்மன்

“இலங்கை அரசின் செயற்பாடுகளை ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட்ட ஐ.நா. சமூகமானது உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.” – இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன். “புதிய அரசமைப்பின் உள்ளடக்கமும் உருவாக்கும் நடைமுறைகளும் நீண்டகால அரசியல் தீர்வுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் மிக அத்தியாவசியமானதாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு விஜயம்செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் …

Read More »

கிழக்கின் முதல்வராக தமிழர் வரவேண்டும்! – கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீநேசன் ஆதங்கம்

“தமிழர் ஒருவரே கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக வரவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். “நடப்பு மாகாண சபையில் தமிழ்பேசும் இனத்தவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம் இனத்துக்கு முதலமைச்சர் பதவியை கிழக்குத் தமிழ் மக்கள் விட்டுக்கொடுத்திருந்தனர். எனவே, விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சருக்கு வழிவிடவேண்டிய தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் எமது சகோதர முஸ்லிம் …

Read More »

வன்முறையற்ற சூழல் உருவாகுமானால் தப்பிச்சென்ற தமிழர்கள் நாடு திரும்புவர்! : சம்பந்தன்

“அச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற தமிழ் மக்களுள் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விரும்பம்கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் வரவேண்டுமானால் நாட்டில் அமைதியானதும், வன்முறையற்றதுமான சூழலொன்று ஏற்படுத்தப்படவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் …

Read More »

மஹிந்தவுடன் கூட்டமைப்பு பேசியிருந்தால் தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைத்திருக்கும்!

“மஹிந்தவுக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தபோது சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவுடன் பேசியிருந்தால் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்கும். அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை போலியாக அணுகியதால்தான் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய கூட்டமைப்பின் ஊடாக நாம் தமிழ், …

Read More »

ஆலோசனை கூறலாம்; உத்தரவாதம் தர முடியாது – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் பதில்

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பது தொடர்பாக, நடத்தப்படும் கலந்துரையாடலின் ஒரு கட்டமாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத …

Read More »

தமிழ் அரசியல் கைதிகளை கைவிடுவதானது தமிழர் அரசியலை கைவிடுவதற்கு சமனாகும்!

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடன் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டு அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தனர். இந்தச் சந்திப்பு …

Read More »

தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் நியாயமான தீர்வு – மோடியிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் முடிவுக் கட்டத்தில் நேற்று மாலை 5.55 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். மிகக் குறுகிய நேரமே …

Read More »

கூட்டமைப்பு அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அபிவிருத்தியையும் மையப்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். தமிழ் மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வனையும், இறுதி தீர்வினையும் பெறுவதற்கே போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்முனை – பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே …

Read More »

தமிழ் மக்களின் உரிமைகளை மையப்படுத்தி கிழக்கில் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு

‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ள நிலையில், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்போது, வடக்கு- கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும், அப்பாவி விவசாயிகளின் காணி ஆக்கிரமிப்பை …

Read More »

பலாலி விமான நிலையத்தை சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணி கூட்டமைப்பு – படையினர் இடையே பேச்சு இணக்கமின்றி முடிவு

பலாலி விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினருடனான நேற்றைய கூட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தக் காணி தொடர்பில் உயர்மட்டப் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினர், அரச அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான முத்தரப்புச் சந்திப்பு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில், பலாலி விமான நிலையம் மற்றும் அனைச் சுற்றியுள்ள …

Read More »