அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
பொருளாளரின் அனுமதியின்றி பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது என அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று கடிதம் அனுப்பி யுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். இதை யடுத்து அதிமுகவின் பொருளா ளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி நேற்று முன்தினம் இரவே அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டார். புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனி வாசன் நியமனம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, தன்னை பொரு ளாளர் பொறுப்பில் இருந்து யாரும் நீக்க முடியாது என பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு நேற்று அவர் அனுப்பியுள்ள கடிததத்தில், “சட்டப்படி நானே இன்னும் கட்சியின் பொருளாளர். எனவே, பொருளாளரின் அனுமதியின்றி பணப்பரிமாற்றம் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.