கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி பிரவின்நாயரிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அன்பு தென்னரசு, கவுரி சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து கா.கலைக்கோட்டுதயம் பேரணியாக புறப்பட்டு மண்டல அலுவலகம் வந்தடைந்தார்.

