Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 216)

இலங்கை செய்திகள்

ஐ.நா. உரை குறித்து அமைச்சரவையில் மைத்திரி விளக்கம்!

அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 26ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருப்பதால் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேற்படிக் கூட்டத்தை நடத்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்குச் செல்வது மற்றும் அந்த விஜயம் குறித்து ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறிய விளக்கமொன்றை அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Read More »

புதிய அரசமைப்பு தொடர்பில் சம்பந்தன் – தினேஷ் சந்திப்பு! – விரைவில் கூட்டுப் பேச்சுக்கும் ஏற்பாடு

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்குமிடையில் விரைவில் முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது. பொது எதிரணியின் அழைப்பின்பேரில் இந்தப் பேச்சு கொழும்பில் நடைபெறவுள்ளது எனவும், இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் ஆராயப்படும் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்தப் பேச்சுக்கான அழைப்பை விடுத்துள்ளார் …

Read More »

இலங்கையில் 81 சிறுவர்கள் உட்பட 2,688 பேருக்கு எயிட்ஸ்!

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டு முடிவில் நாட்டில் மொத்தமாக 2,688 பேருக்கு எயிட்ஸ் நோய் பீடித்திருக்கின்றது எனவும், அவர்களில் 81 பேர் சிறுவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் பால்வினை நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த 2,688 நோயாளிகளில் ஒருவர் மாத்திரம் மரணமடைந்துள்ளார். இலங்கையில் எயிட்ஸ் நோய் வெகுவாகக் குறைந்திருந்தபோதிலும் அது இப்போது படிப்படியாக அதிகரித்துவருகின்றது. மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவை வைத்துக்கொள்வதே இந்த …

Read More »

புதிய அரசமைப்பு மீது நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு!

புதிய அரசமைப்பு மீது எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அந்தக் காலஎல்லையை இலக்குவைத்து புதிய அரசமைப்பை தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ள அரசு, இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. புதிய அரசமைப்பை 2017 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுமீது இராஜதந்திர மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றாவிட்டால் இனி …

Read More »

சர்வஜன வாக்கெடுப்புக்கு சம்பந்தன் பச்சைக்கொடி!

“புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசிடமும் தெளிவுபடுத்தியுள்ளோம்.” –  இவ்வாறு தெரிவித்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். “புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் காலம், பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் காலம் என்பன குறித்து எங்களுக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது. அவை உரிய முறைப்படி நடக்குமென எதிர்பார்க்கிறோம். ஆனாலும், சர்வஜன …

Read More »

சம்பந்தனை அழைக்கிறார் கோட்டா! – ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் பெருமெடுப்பில் கண்டியில் 

புதிய அரசமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உதயமாகியுள்ள ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தான் அழைப்பு விடுக்கவுள்ளார் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ‘எலிய – ஒளிமயமான அபிலாஷைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு அறிமுகம் செய்யும் நிகழ்வு பாதுகாப்பு …

Read More »

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர நினைவுத்தூபி! – அநுராதபுரத்தில் அமைப்பது பற்றி பரிசீலிப்பு என்கிறார் ருவான்

போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபியை அமைப்பதற்குரிய முழு ஆதரவையும் அரசு வழங்கும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்றில் அறிவித்தார். போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக நினைவுத்தூபியொன்றை அமைக்கவேண்டுமெனக் கோரி ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரின்போது தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் தமது உறவுகளை …

Read More »

’20’ ஐ திருத்தங்களுடன் மாகாண சபைகளில் களமிறக்கியது அரசு! – அடுத்த வாரம் விசேட அமர்வு

திருத்தியமைக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசு மீண்டும் அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பில் விவாதித்து – தீர்மானமொன்றை எடுப்பதற்காக அடுத்த வாரம் சகல மாகாண சபைகளும் விசேட அமர்வை நடத்தவுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கும், தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கும் வழிவகுக்கும் வகையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை தேசிய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்து, …

Read More »

இடைக்கால அறிக்கை 21ஆம் திகதி வெளியாகும்! – அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்று அன்று கூடும்

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக இதுவரை செயற்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழு, சுமார் எழுபதுக்கும் அதிகமான தடவைகள் கூடித் தயாரித்த இடைக்கால அறிக்கை, நீண்ட இழுபறிக்குப் பின்னர் முழு அளவில் இறுதி செய்யப்பட்டு, குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்போது அங்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் அது சமர்ப்பிக்கப்படும். அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டடல் குழு கொழும்பில் எழுபத்து மூன்றாவது தடவையாக பிரதமர் ரணில் …

Read More »

கூட்டமைப்பின் கோட்டைக்குள் மலரத் துடிக்கிறது மஹிந்த அணி! – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் பஸில் இரகசியப் பேச்சு

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற வடக்கு மாகாணத்தில் கால்பதிப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மஹிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறிவைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்துவருகின்றது. இதன்படி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் உட்பட வடக்கிலுள்ள சுமார் 30இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் கொழும்பில் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது மஹிந்தவுடன் இணைந்து அரசியல் பயணத்தை …

Read More »