Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 160)

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப 10 வருட விசேட வேலைத்திட்டம்!

யுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் 10 வருட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, யுத்தத்திற்கு முன்னராக காலப்பகுதியில் வடக்கில் சிறப்பான கல்வி வளர்ச்சி …

Read More »

ரஷ்ய தீ விபத்துக்கு ஜனாதிபதி இரங்கள்

இக்கட்டான சூழ்நிலைகளில் ரஷ்ய அரசுடனும், மக்களுடனும் அவர்களது துயரை பகிர்ந்துக்கொள்வதற்கு இலங்கை அரசும், மக்களும் துணை நிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கெமரோவா நகரிலுள்ள வர்த்தக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்து குறித்து ஜனாதிபதி வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள நினைவுக் குறிப்பேட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு விசேட குறிப்பொன்றின் ஊடாக …

Read More »

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஐ.தே.கட்சியின் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது என ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. அரசியல் தொடர்பில் அக்கறை காட்டி வரும் பலரும் எதிர்பார்த்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன் போதுஇ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்இ ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர்ப்பார்க்கும் வகையில் மறுசீரமைப்பு …

Read More »

கண்டி கலவரத்தின் பின்னணியில் மஹிந்தவின் சகாக்கள்!

கண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளாரென சந்தேகிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் இதுகுறித்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படுமென மேலும் தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற …

Read More »

பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய அமைச்சர்கள் குழு நியமனம்

கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம், டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளில் பின்னர், அது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள …

Read More »

நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைக்கிறார் மஹிந்த

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு போட்டியிட முடியாததால், நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே அவ்வணியினர் காய்நகர்த்தி வருகின்றனரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நாட்டில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்களிடம் நம்பிக்கையற்று போனவர்களே இன்று பிரதமருக்கு எதிராக …

Read More »

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை கருனை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள்

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கையை விடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். -இந்த நிலையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று(26) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். …

Read More »

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் பல மீட்பு

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து –மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று திங்கட்கிழமை(26) காலை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் …

Read More »

பிரதமர் பதவியை துறக்க வேண்டும் ; இராஜதந்திரிகளும் அழுத்தம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளால் நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கி நகர்கிறது. அதனை கருத்திற் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென இராஜதந்திரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் அறிய முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் புதிய பிரதமர் ஒருவரை நியமித்து ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும்வரை நாட்டை ஸ்திரமாக கொண்டுசெல்லுமாறும் பிரதமருக்கு இராஜதந்திரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். …

Read More »

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அனைத்து எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகவேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும்இ மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பிரதமர் உட்பட ஐ.தே.கவிலுள்ள மூத்த அமைச்சர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீது …

Read More »