கச்சத்தீவை தாரை வார்க்க இந்திரா காந்தியிடம் பணம் பெற்றவர் கருணாநிதி சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கச்சத்தீவை …
Read More »சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணி 61 பக்க மனு தாக்கல்
சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணி 61 பக்க மனு தாக்கல் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டது கட்சியின் சட்ட விதிகளின் படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனிடம் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.பி.க்கள் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. …
Read More »36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது
36 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது. பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 35கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை இரவு கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் அதே பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர். கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா சரை ஒன்றும் கைபெற்றப்பட்டிருந்தது. …
Read More »டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்! டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் என்ற தலித் மாணவர், திங்கள்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை பிற்பகல் முனிர்காவில் உள்ள தனது நண்பரின் அறைக்குச் சென்ற அவர், அங்கு …
Read More »மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்
மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம் மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி எழுத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் இருந்து எழுத்தூரை நோக்கி பயணித்த லொறியும், தாழ்வுபாடு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான …
Read More »இலங்கை கொடியுடன் சென்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்
இலங்கை கொடியுடன் சென்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல் இலங்கை தேசியக் கொடியுடன் சென்ற எரிபொருள் நிரப்பிய கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டுபாய்க்கு சொந்தமான Aris – 13 என்ற இக் கப்பல் எட்டு கப்பல் பணியாளர்களுடன் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை பிறப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் கப்பலில் இருந்த கடல் கண்காணிப்பு கட்டமைப்பு செயலிழந்ததாகவும் கடற்கொள்ளை …
Read More »கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ?
கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு யார் ? இணக்க அரசியல் என கூறிக்கொண்டு, சம்பந்தமற்ற கருத்துக்களை தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடுவதாக சம உரிமைக்கான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, புதிய மாக்ஸ்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், இரண்டு வருட காலஅவகாசம் வழங்குவதை அமெரிக்காவும் மேற்குலகமுமே தீர்மானிக்கின்றது என குறிப்பிட்டார். வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஒன்று …
Read More »தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார்
தமிழர்களின் எதிர்ப்பை சுமந்திரன் சம்பாதிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளதாக அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார். தனது அரசியல் வாழ்க்கையில் மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்தமை அவர் செய்த தவறு எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்ற …
Read More »பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுகின்றார்
பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுகின்றார் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு எதிராக கருத்து வெளியிடுவோரை சமூக வலைத்தளங்களில் இதுவரை பார்க்க முடியவில்லை எனவும் அது குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாகரன் தெய்வம் போல் நடத்தப்படுகின்ற போதிலும் மஹிந்த ராஜபக்ச, ஆட்கொலை புரிந்தவர் எனவும் திருடர் எனவும் கூறப்படுவதாக அவர் கடுமையான விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதேபோன்று …
Read More »வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு
வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு ஸ்ரீலங்கா தொடர்பான வரைவுத் தீர்மானம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் என தலைப்பிடப்பட்டு இந்த வரைப்புத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மொண்டிநீக்ரோ, மசடோனியா, பிரித்தானியா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த தீர்மானத்திற்கு பிரதானமாக அனுரணை வழங்கும் நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் …
Read More »