கடந்த மாதம் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. தொலைத்தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட பலவற்றிகும் உதவும் ஜிசாட்-6ஏ அதிநவீன செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. …
Read More »தமிழக ஆட்சியாளர்களுக்கு தான் கேட்கவில்லை, மத்தியில் இருப்போருக்காவது கேட்கட்டும்; கமல்ஹாசன்
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கமல்ஹாசன் நேரில் சென்று பங்கேற்று உள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள …
Read More »காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடஙகியது. உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் …
Read More »இஸ்ரேல் போராட்டத்தில் துப்பாக்கி சூடு- 16 பேர் பலி
இஸ்ரேல் நாட்டில் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர். காசா பகுதி இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் உள்ளது. நேற்று, இங்கு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் முயற்சித்து வந்தனர். ஆனால், அவர்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. …
Read More »வேடிக்கை பார்க்கும் தமிழகமே!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இன்று மதியம் 3.30 மணியளவில், மெரினாவில் கூடிய சில இளைஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக போரட்டத்தை முன்னெடுத்தனர். மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் பிடித்தவாறு கடற்கரையில் நிற்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. அவர்களில் சிலரை போலீசார் தடுத்து, அறிவுரை …
Read More »தர்மயுத்தம் தொடங்கும் முன்பே என்னை சந்தித்தார் ஓபிஎஸ்: குருமூர்த்தி
முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு தர்மயுத்தம் என்ற பெயரில் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தர்மயுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தன்னை அவர் சந்தித்ததாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன், தன்னை சந்திக்க வேண்டும் என்று ஒரு நண்பர் மூலம் தூது …
Read More »மதிமுக தொண்டர் தீக்குளிப்பு – ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு
ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக செயலாளர் வைகோவின் கண் எதிரிலேயே ஒரு தொண்டர் தீக்குளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைப்பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, மதுரை பழங்காநத்தத்தில் அவர் இன்று நடைபயணத்தை துவங்கினார். அந்நிலையில், …
Read More »சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள்
ஐரோப்பாவில் நடைபெற்று வரும் சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பெல்ஜியம் நகரில் சாக்லெட் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட சாக்லெட்டால் செய்யப்பட்ட விலங்குகளில் சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சாக்லெட்டால் ஆன மிருகங்களின் உருவ சிலை பார்ப்பதற்கு தத்ரூபமாய் காணப்பட்டது. யானை, குரங்கு, முயல் உள்ளிட்ட சாக்லெட் சிலைகளை 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து …
Read More »நாளை சிறைக்கு செல்லும் சசிகலா?
தனது குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். அந்நிலையில், நடராஜனின் சொத்துக்களை பிரிப்பதில் நடராஜனின் உடன் பிறந்தவர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சசிகலா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் …
Read More »ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இராப்போசன விருந்துபசாரம் வழங்கிய அமைச்சர் ராஜித
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இராப்போசன விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். நல்லாட்சி அரசின் அனைத்து உறுப்பினர்களதும் வெற்றியாக இந்தத் தீர்மானம் கருதப்படுகின்றது. இந்த வெற்றியை கொண்டாடும் நோக்கில் சுகாதார அமைச்சால் இராசாப் போசன விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டுள்ளது. ஆமைச்சர் ராஜிதவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் நான்கு …
Read More »