யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் …
Read More »தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி நேற்று முதல் மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மேலதிக பஸ்சேவை எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு – புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திலிருந்து மேலதிகமாக 3900 பஸ்பயணங்கள் இடம்பெறவிருக்கின்றன. சொந்த இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு திரும்பும் மக்களின் நலன்கருதி எதிர்வரும் …
Read More »நெடுந்தீவு சிறுமி கொலை சந்தேக நபருக்கு மரண தண்டனை
நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி என்ற சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 …
Read More »விமலுக்கு பிணை
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு 87 நாட்களுக்குப் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது. அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பல முறை பிணை கோரியிருந்த போதிலும் அவருக்கான பிணையை வழங்க நீதிமன்றம் …
Read More »வவுனியாவில் “சமுர்த்தி அபிமானி “
உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வவுனியாவில் “சமுர்த்தி அபிமானி” நிகழ்ச்சித்திட்டத்தினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார ஆரம்பித்து வைத்தார். மாவட்டசெயலக வளாகத்தில் நேற்று ஆரம்பமான இந்த நிகழ்வினை சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனையிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Read More »பிரதமர் எதிர்வரும் 10ம் திகதி யப்பான் விஜயம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10ம் திகதி யப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் பிரதமருடன் இந்த விஜத்தில் பங்குகொள்ளவுள்ளார். 16ம்திகதி வரை யப்பானில் தங்கி இருக்கவுள்ள பிரதமர் இந்த விஜயத்தில் யப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபே (Shinzo Abe) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். யப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயம் மேலும் உதவும் என்று யப்பான் அரசாங்கம் …
Read More »நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் – பிரதமர்
போட்டித்தன்மை வாய்ந்த, வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய ஏற்றுமதி மூலோபாய அபிவிருத்தி மாநாட்டில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வெளிநாட்டுக் கடனும், நிலுவைத் தொகையும் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களாகும். நாட்டுக்கு போதுமான அன்னிய செலாவணி கிடைப்பதில்லை. ஏற்றுமதி சுற்றுலா மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு என்பனவற்றின் மூலமே கூடுதலான அன்னிய …
Read More »சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வது ஏன்? – சசி தாரூர்
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்த இந்தியா கவலை கொள்வதாக, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை வெளியீட்டு வழாவில் உரையாற்றிய போதே அவர் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில் சீன அட்மிரல் செங் சிறிலங்காவுக்கு வந்தது தனியே வணிக நோக்கத்துக்காக அல்ல. சீனப் பேரரசின் கீழ் உலக ஒழுங்கைக் கொண்டு …
Read More »வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு சபையை தலைமை தாங்கும் அதிகாரம்
வட மாகாண சபை அவை தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத நிலையில், சபையை தலைமை தாங்கும் அதிகாரம் வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார். …
Read More »இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன
இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, அருட்தந்தை பிராஸ்சிஸிசுடன் 56 முன்னாள் போராளிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதம நிதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More »