சிறிலங்கா கடற்படையின் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்திருப்பதாக இந்திய கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்எல்என்எஸ் சமுத்ர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலும், எஸ்எல்என்எஸ் சுரணிமல என்ற ஏவுகணை விரைவுத் தாக்குதல் கப்பலுமே கொச்சி துறைமுகம் வந்துள்ளன. இந்தக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கப்டன் ஜெகத் பிரியசாந்த பிரேமரத்ன, கப்டன் றோகித அபேசிங்க மற்றும் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு …
Read More »விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விரைவில் குடியேற வேண்டும்: அரசாங்க அதிபர்
வலிகாமம் வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விரைவில் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.7 …
Read More »நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடக்கம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்து பிரதமர் கலந்துரையாடவுள்ளதுடன், பல முக்கிய பேச்சுக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மாரசிங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தப் …
Read More »இறங்குதுறை இன்மையால் பூநகரி மீனவர்கள் சிரமம்
கிளிநொச்சி பூநகரி கரையோரப் பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மையால் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பூநகரியின் கடற்தொழில் கிராமங்களான வலைப்பாடு, வேரவில், நாச்சிக்குடா, பள்ளிக்குடா, ஆகிய கரையோரப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் தொழிலை மேற்கொள்ளும் வகையில் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியாதுள்ளது. மேலும் கடல்வற்றுக்காலங்களில் நீண்ட …
Read More »வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை தொடர்பில் மக்கள் விசனம்
வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடத்தப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பெருமளவான பொது மக்கள் காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக வருகை தந்துள்ளனர். வவுனியா தமிழ் …
Read More »யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை ; வழக்கை கொழும்புக்கு மாற்ற முயற்சி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களில் …
Read More »ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிப்பு : விரைவில் 10,000 ரூபா வழங்க நடவடிக்கை
மலையக பெருந்தோட்டட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பவை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பாராளுமன்றத்தில் இணைந்து பேச்சுகள் நடத்தியதன் விளைவாக கொடுப்பவை 4000 ரூபாவால் அதிகரித்து விரைவில் 10, 000 ரூபாவை உதவி ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன தெரிவித்தபார். கடந்த காலங்களில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்னவு அதிகரிக்கபடவில்லை என்று பலர் பல்வேறு வகையிலும் குறிப்பாக முக புத்தகங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறுபட்ட …
Read More »வலி.வடக்கில் 28.2 ஏக்கர் காணி விடுவிப்பு
வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறை ஊறணிப் பகுதியிலுள்ள சுமார் 28.2 ஏக்கர் மக்கள் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கியிருந்த குறித்த பிரதேசத்தினை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக மக்கள் போராடி வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சுமார் 28.2 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட குறித்த பகுதிளில் உள்ள கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டு, கிணறுகள் மூடப்பட்டு பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்ற நிலையில், குறித்த காணிகளின் எல்லைப்பரப்புக்களை அடையாளம் காண்பதில் அப்பிரதேச மக்கள் …
Read More »உணவு ஒவ்வாமை இறக்காமத்தில் மூவர் பலி
அம்பாறை – இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த புதன்கிழமை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் உயிரிழந்த நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக …
Read More »நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசாங்கத்தின் வசம்
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதனை போதனா வைத்தியசாலையாக நடத்திச் செல்ல தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி சர்ச்சை குறித்த தீர்வு திட்டம் இன்று அரசாங்கத்தால் வௌியிடப்படும் என முன்னதாக பாராளுமன்றத்தில் அவர் கூறியிருந்தார். இதற்கமைய சட்டமா அதிபரின் அனுமதியுடன் இலங்கை வைத்திய சபையால் முன்வைக்கப்பட்ட இலங்கை வைத்திய கல்வி குறித்த குறைந்த …
Read More »