Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 88)

தமிழ்மாறன்

சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது

சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேச தமிழ்மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வேறு பிரதேச சிங்கள மீனவர்கள் தமது நிலங்களுக்கு தற்போது உரிமை கொண்டாடிவருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கொக்கிளாய் கடலில் தமது மீன்பிடிக்கான கரைவலைப்பாடுகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இன்றைய வழக்கு விசாரணைகளில் கொக்கிளாய் மீனவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத நிலையில், வழக்கை அடுத்த மாதம் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், தேங்காய் உடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னால் ஏ9 வீதியின் அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் இன்று 60 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், …

Read More »

நாட்டில் அதிக வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் …

Read More »

கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 1500 ஏக்கா் காணி

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இராணுவத்தினர் இதுவரை 1515.7 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் தனியார் அனுமதிப்பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான 973.5 ஏக்கர் …

Read More »

27ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

தமிழ் மக்கள் பேரவையினரால் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரவையின் இணைத் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டுத்தருமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை வலுப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு நீதி கோரும் வகையில் …

Read More »

மீத்தொட்டமுல்ல அனர்த்தம் ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகைதந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதிநிதிகள் குழுவின் தலைவரான ஆவைளரவயமந ரேஅயாயவய அவர்கள் அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் …

Read More »

போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி

கடுமையான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத்தின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கஜபா காலாட்படை பிரிவின் தலைமை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஜபா படைப்பிரிவின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இவ்வாரம் ஓய்வுபெறவுள்ள நிலையில், அப் பதவிக்கு சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய இராணுவத்தின் 58ஆவது …

Read More »

இஸ்லாமிய நாடுகள் இராணுவக் கூட்டணி தலைமை பொறுப்பை ஏற்றது பாக்கிஸ்தான்

இஸ்லாமிய நாடுகள் இராணுவ கூட்டமைப்புக்கு தலைமையேற்பதற்காக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் விதமாக 41 நாடுகளின் ஒப்புதலுடன் “இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு’ சவுதி அரேபியா தலைமையில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையுடன், தீவிரவாதத்தை எல்லா விதத்திலும் ஒழித்துகட்ட இந்தக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்புக்கு பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, குவைத், …

Read More »

இறக்காமம் – மாயக்கல்லி பகுதிக்கு நுழைய இடைக்காலத் தடை : அம்பாறை நீதிமன்றம் உத்தரவு

கடந்த 3 தினங்களாக இறக்காமம் – மாயக்கல்லி பகுதியில் இடம்பெற்று வரும் இனமுறுகலை அடுத்து இப்பிரதேசத்தில் எவரும் நுழையாதவாறு மே மாதம் 17ஆம் திகதி வரை அம்பாறை மேலதிக மாவட்ட நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி மாயல்கல்லி மலையடிவாரத்தில் பள்ளியான் செய்னுலாப்தீன் என்பவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமான வேளையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினருக்கும் இறக்காமம் பிரதேச மக்களுக்கும் இடையில் …

Read More »

மத்திய அரசிற்கெதிராக பிரேரணை கொண்டுவரப்படும்: நசீர் அஹமட்

மாகாண அரசின் அதிகாரத்தைப் பறித்தெடுக்கும் மத்திய அரசின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி மாகாண சபையில் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவு தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றது. இந்த நிலையில், மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்க முயற்சிப்பது எந்த வகையில் நியாயமானது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் …

Read More »