Thursday , June 26 2025
Home / தமிழ்மாறன் (page 84)

தமிழ்மாறன்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்: சமகால அரசியல் குறித்து விவாதம்

தமிழரசுக் கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் மற்றும் சமூக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் கட்சியின் மத்திய செயற்குழு மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) கூடியுள்ளது. ஊறணியிலுள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று காலை குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், எஸ்.சிறிதரன், துரைசிங்கம், எஸ்.சுமந்;திரன், எஸ்.சிறிநேசன், …

Read More »

முள்ளிக்குளம் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டன

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த வாரம் …

Read More »

பேச்சுவார்த்தைக்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அரசிடம் பகிரங்க வேண்டுகோள்

எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் மனந்திறந்து பேச விரும்புகிறோம். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (சனிக்கிழமை) 69ஆவது றாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த தாயொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், …

Read More »

முஸ்லிம்களுக்கு விமோசனம் கிடைக்கப்போவதில்லை

முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இந்த ஆட்சியில் விமோசனம் கிடைக்கப்போவதில்லை இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். மே தின நிகழ்வையொட்டி அதன் ஏற்பாடுகள் தொடர்பில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தற்போது நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நான் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தேன் எனது காலத்தில் காலத்தில் இனவாதம் …

Read More »

சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணிப்பு

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகளவில் சீனாவின் படை பலம் அபாரமானது. ஆண்டுதோறும் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்மூலம் ஆயுதக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது. சீனாவிடம் ‘சி.என்.எஸ். லயனிங்’ என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் மட்டும் இருந்து வந்தது. அதுவும் கூட மிகப்பழையது. 25 ஆண்டுகளுக்கு முந்தையது. பழைய சோவித் …

Read More »

தென் கொரியாவில் அமெரிக்கா கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்கா தென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதலை நடத்த போவதாக அறிவித்துள்ளார். அவருடைய மிரட்டல் காரணமாக …

Read More »

வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா: ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுகிறது

வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா இதற்காக ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுவதாக வங்க தேச திட்ட மந்திரி முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார். வங்காள தேச அதிபர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சவுதி அரேபிய மன்னரை சந்தித்த அவர், வங்காள தேசத்தில் பல்வேறு இடங்களில் மசூதி கட்டுவதற்கு சவுதி அரேபியா உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஏற்றுக் …

Read More »

பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்தால் மக்களின் மனநிலை உக்கிரமடையும்: சி.வி.

பொறுப்புக்கூறலை தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் ஒரு சிறந்த உதாரணமாகும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரது உறவுகளின் வடக்கு- கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வெளியிடும் வகையில் வட. மாகாண சபையில் முதலமைச்சர் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த …

Read More »

இந்தியாவிலிருந்து 46 அகதிகள் தாயகம் திரும்பினர்

இந்தியாவின் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 46 பேர் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக வசதிப்படுத்தலுடன், குறித்த அகதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா ஆகிய …

Read More »

ஜீ.எஸ்.பி. இலங்கைக்கு மீண்டும் கிடைக்குமா? – இன்று வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச்சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், மிக மோசமான மனித உரிமை மீறல்களால் இழந்த இவ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் …

Read More »