Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 69)

தமிழ்மாறன்

அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச தயார்

அணுஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார். அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் நேற்று கூடிய ஐ.நா.சபை கூட்டத்திலும் வட்கொரியாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வடகொரியா மீது அமெரிக்கா …

Read More »

இந்தியா – பாக். இடையேயான பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ஐ.நா செய்தித் தொடர்பாளர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது குல்புதீன் ஜாதவ் மரண தண்டனை, எல்லை தாண்டிய தாக்குதல், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சாலை அமைத்தல் போன்ற விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. சர்வதேச அரங்கில் மாறி மாறி இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் …

Read More »

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை நிலை நிறுத்தும் சீனா

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் செயற்கை தீவுகளை அமைத்து ராணுவத்தளங்களை உருவாக்கி வரும் சீனா தற்போது ராக்கெட் லாஞ்சர்களை அப்பகுதியில் நிலை நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்தக் கடல் பரப்பில் அவ்வப்போது ராணுவப் பயிற்சிகளை …

Read More »

சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகநகரத் திட்டங்களை வெற்றிகரமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு சீனாவுடன் இணைந்து பணியாற்ற சிறிலங்கா விரும்புகிறது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். …

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க படையினர் தீவிரம்

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு தமிழர் தாயகத்தில் நாளை (வியாழக்கிழமை) உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அவற்றை தடுக்க படையினர் முயற்சிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வார காலமாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டடு வரும் நிலையில், இது குறித்து தென்னிலங்கையில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடக்கு கிழக்கில் மக்களை படையினர் தீவிரமாக கண்காணித்து வருவதோடு, நினைவேந்தல் …

Read More »

காணாமல் போனவர்களது உறவினர்கள் தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 25 சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர். காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை விரைந்து வெளிப்படுத்தி, அவர்களது உறவினர்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இதன்போது ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மகஜரை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சார்பில் …

Read More »

மட்டக்களப்பில் கடும் வரட்சி காரணமாக சிறுபோக செய்கைகள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் சிறுபோகச் செய்கைகள் பாதிப்படைவதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார். குளங்களின் நீர்மட்டம் குறைவடைவதால் சிறுபோக நெற்செய்கைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இம்முறை சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உன்னிச்சை, உறுகாமம், நவகிரி ஆகிய பாரிய குளங்களினதும் புளுக்குணாவ, கடுக்காமுனை, …

Read More »

உரிமைகளை பெறும் நாளிலேயே உண்மையான விடுதலை கிடைக்கும்: சந்திரநேரு சந்திரகாந்தன்

தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நாளிலேயே உண்மையான விடுதலைக்கான பயணம் ஆரம்பிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் இன்றையதினம் (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “”ஏழு கோடி உலகத் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளையும் அழித்த தடயமாக மே 18 முள்ளிவாய்க்கால் …

Read More »

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு: 4 பெண்கள் கைது

கிளிநொச்சி நகருக்கு அண்மையிலுள்ள கிராமப் பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபச்சார நிலையமொன்றை பொலிஸார் இன்று (புதன்கிழமை) சுற்றிவளைத்ததில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரினால் குறித்த …

Read More »

வடகொரியாவை மிரட்டுவதை விடுத்து, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: புதின் அறிவுரை

உலக நாடுகள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மிரட்டக் கூடாது என்று ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஒரு அணு குண்டு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக நாடுகள் வடகொரியா …

Read More »