Tuesday , June 24 2025
Home / தமிழ்மாறன் (page 56)

தமிழ்மாறன்

பிரதமர் தலைமையில் ஜெனீவா பிரேரணை அமுலாக்கக் குழு

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்தும் அமுலாக்கக் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக்கப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் …

Read More »

சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வலியுறுத்தல்

யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா. கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த 17 வயதுடைய சுந்தரராஜன் ப்ரெட்ரிக் என்ற ஈழத்து இளைஞன் இதனை வலியுறுத்தியுள்ளார். நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதிப்பாடு இலங்கை அரசாங்கத்திடம் இல்லையென குறிப்பிட்ட குறித்த இளைஞன், …

Read More »

ஐ.நா. ஆணையாளருக்கு எதிராக முறைப்பாடு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவர் Joaquin Alexander Maza Martelli இடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் படையதிகாரி சரத் வீரசேகர இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். குறித்த இருவரது அறிக்கைகளும் உண்மைக்கு புறம்பானவை எனவும், …

Read More »

உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை

உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை.சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய 2017ஆம் வருடத்திற்கான தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவை 81 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் முதலாவது இடத்தையும்,சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும்,மூன்றாவது இடத்தை ஜப்பான் ஓல் நிபொன் விமான சேவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தரப்படுத்தலில் கடந்த வருடம் இலங்கை 67 ஆவது …

Read More »

பிரான்ஸ்: எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக நியமித்தார் அதிபர் மெக்ரான்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி …

Read More »

டிரம்பை ஒருபோதும் காதலிக்கவில்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு

‘டிரம்பை ஒருபோதும் நான் காதலிக்கவில்லை’ என பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவியும், மாடல் அழகியுமான கர்லா புரூனி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி (49). இவர் முன்னாள் மாடல் அழகி. பிரபல பாடகியாகவும் திகழ்ந்தார். இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இவர் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அவரது 2-வது மனைவி மார்லா மாப்பில்ஸ் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்ததாகவும் …

Read More »

கோமாவில் இருந்த மாணவன் மரணம்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம்

வடகொரியாவால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கோமா நிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரின் மரணத்துக்கு வடகொரியாவை குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு …

Read More »

ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிட முயற்சி: வாசுதேவ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனவாத கலவரங்களை நாட்டில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் இன்று இனவாத கலவரங்களோ முரண்பாடுகளோ …

Read More »

காத்திருப்புடன் மற்றுமோர் அகதிகள் தினம்!

உரிமைக்காக போராடி, அனைத்தையும் இழந்து உயிரை மாத்திரம் தக்கவைத்துக்கொண்டும், இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும் அகதிகளாக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீராமல் இந்த அகதிகள் தினத்திலும் வழமைபோன்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் எமது மக்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில் சர்வதேச அகதிகள் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இயற்கை அனர்த்தம் மற்றும் போர் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் சர்வதேச அளவில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக …

Read More »

அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்து!

கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் …

Read More »