Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 48)

தமிழ்மாறன்

பெருந்திரளான பக்தர்களுக்குத் தேரேறி அருட்காட்சியளித்தார் நயினை அம்மன்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத்  தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. அதிகாலை மூன்று மணிக்கு ஆரம்பமான அபிஷேகம் மற்றும்  சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து காலை ஏழு மணிக்கு வசந்த மண்டபப்பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அம்மன்  வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

Read More »

எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்! – பிரதமர் ரணில் திட்டவட்டம்

நாட்டில் எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் தொடரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னாரில் உலர் வலய நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்புக் குறித்து யாருமே அச்சப்படத் தேவையில்லை. இதனை அமைப்பதற்கு மக்கள் அரசுக்கு ஆணை வழங்கியுள்ளதால் இந்த விடயத்தை அரசால் உதாசீனம் செய்ய முடியாது. புதிய அரசமைப்பில் பௌத்த …

Read More »

ஐந்து அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஆராய வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு 21 இல்!

வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களினதும் கடந்த மூன்றரை வருடகால செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்தச் சிறப்பு அமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 98 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா …

Read More »

அரசின் பாதகமான நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்பதற்குப் பின்வாங்கமாட்டோம்! – அமைச்சர் ரிஷாத்

“சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் நேர்மையுடன் ஈடுபட்டு வருகின்றோம்.” – இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முசலி தேசிய பாடசாலையின் மூன்று மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். …

Read More »

இந்தோனேசியாவில் 73 வயது பெண்ணை மணந்த 15 வயது சிறுவன்

இந்தோனேசியாவில் 73 வயது பெண்ணை 15 வயது சிறுவன் மணந்த சம்பவம் அப்பகுதியில் சமீப கால பரபரப்பு பேச்சாக உள்ளது. 75 வயது மூதாட்டி ரொகாயா பின்டியுடன் சிறுவன் செலாமெட் ரியாடி. ஜகர்த்தா: இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15). சமீபத்தில் இவன் மலேரியா காய்ச்சலால் கடும் அவதிப்பட்டான். அப்போது அவனை அண்டை வீட்டில் வசிக்கும் 75 வயது …

Read More »

2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக வரும் 2040-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் 1.2 சதவிகிதம் அளவுக்கே அந்நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு …

Read More »

தீவிரவாதிகள் என தவறாக நினைத்து நைஜரில் ராணுவம் சுட்டதில் 14 பொதுமக்கள் பலி

நைஜீரியா எல்லையில் உள்ள அபாடம் கிராமத்தில ரோந்து சுற்றிய ராணுவ வீரர்கள் 14 பேரை சுட்டுக்கொன்றனர். அதன்பின்னர் தான் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல. அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்தது. நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது எல்லை தாண்டிச் சென்ற அண்டை நாடான நைஜரில் தாக்குதல்கள் நடத்துகின்றன. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜர் ராணுவம் தீவிரமாக உள்ளது. ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து சுற்றி …

Read More »

மஹிந்தவின் ஆட்சிக்கு மீண்டும் இடம் இல்லை – மைத்திரி திட்டவட்டம்

“2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு நான் முடிவுகட்டினேன். அத்தகைய ஆட்சிக்கு இந்த நாட்டில் மீண்டும் இடம் கிடையாது.” இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ”முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கு அழகானதொரு உலகைக் காட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு சிலர் (மஹிந்த தரப்பினர்) மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் குறித்து இன்று நாட்டு மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். கல்கமுவ பிரதேசத்தில் …

Read More »

கஜேந்திரகுமாரின் சில்லறைக் கருத்துக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர் தமிழர்! – சம்பந்தன்

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிவருகின்ற சில்லறைத்தனமான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அவருக்குப் புகட்டிய பாடங்களை மறக்காமல் இருந்தால் சரி.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தமிழீழ விடுதலைப்புலிகளிடம் நீங்கள் (இரா.சம்பந்தன்) புனர்வாழ்வு பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிட்டு …

Read More »

மகாநாயக்கர்களிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஒற்றையாட்சித் தன்மைக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது. மகாசங்கத்துடன் கலந்துரையாடப்பட்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். கண்டியில் உள்ள அதிபர் செயலகத்தில் நேற்று மாலை நடந்த சந்திப்பின் போதே, மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். இன்னமும் புதிய அரசியலமைப்பு வரைவு இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு …

Read More »