Sunday , June 22 2025
Home / தமிழ்மாறன் (page 45)

தமிழ்மாறன்

மொசூல் நகரில் மனைவி-குழந்தைகளை மனித கேடயமாக்கி உச்சக்கட்ட போரில் ஈடுபட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈராக் நாட்டின் மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்களது மனைவி, குழந்தைகளை மனித கேடயமாக்கி இராணுவத்துடன் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் ராணுவத்தின் கடும் தாக்குதலால் ஒவ்வொரு பகுதியாக இழந்து வந்தனர். கடைசியாக அவர்கள் வசம் மொசூல் நகரம் இருந்தது. அதை மீட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் போர் தொடுத்தன. 9 மாத தீவிர …

Read More »

தென்னாப்பிரிக்கா: காட்டில் இருந்து தப்பி ஊருக்குள் புகுந்த 4 சிங்கங்கள்

தென்னாப்பிரிக்காவில் காட்டில் இருந்து தப்பிய 4 சிங்கங்கள் ஊருக்குள் புகுந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள குருகர் என்ற இடத்தில் 12 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட அடர்ந்த காடு உள்ளது. இங்கு சிங்கம் உள்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் அங்கு வசிக்கின்றன. இவற்றில் 4 ஆண் சிங்கங்கள் காட்டில் இருந்து தப்பி ஊர் பகுதிக்குள் புகுந்து விட்டன. …

Read More »

மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது

”உண்மையே கடவுள்’ என்ற மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம் 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. தனது வாழ்நாளில் இந்த ஓவியத்துக்குதான் அவர் வெகுநேரம் அமர்ந்து ’போஸ்’ கொடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. 1931-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி லண்டன் நகருக்கு சென்றிருந்தார். நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்ஸ்லி ஹால் என்ற இடத்தில் அவர் தங்கியிருந்தபோது அவரை ஒவியமாக தீட்ட …

Read More »

புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! – சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்கிறது ஐ.தே.க.

புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். “பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படமாட்டாது. சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “இன்னும் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படவில்லை. அதில் அடங்கப்போகின்ற விடயங்கள் பற்றி எதுவும் தெரியாமல் பொய்யான …

Read More »

ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய நேரம் நெருங்கிவிட்டது!

“அரசியல், பொருளாதாரம் என அனைத்து வழிகளிலும் அரசு ஆட்டங்கண்டுள்ளதால் விரைவில் ஆட்சிமாற்றமொன்று ஏற்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாகவே தென்படுகின்றது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாரிய நிதிமோசடி குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுபிள்ளைபோல் செயற்படும் …

Read More »

மன்னாரில் நுளம்பை கட்டுப்படுத்தும் இரசாயனத்திற்கு எதிர்ப்பு!

மன்னாரில் மலேரியா நுளம்பை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ‘அபேற்’ எனப்படும் இரசாயனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். மன்னாரில் டெங்கு மற்றும் மலேரியா நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கிணறுகளினுள் போடப்படும் ‘அபேற்’ எனும் இரசாயன கலவையினால் நிலத்தடி நீர் மாசடையும் எனவும் குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு …

Read More »

புதிய அரசியலமைப்பில் ஒரு வார்த்தை கூட உருவாக்கப்படவில்லை: லக்ஸ்மன் கிரியெல்ல

புதிய அரசியலமைப்பில் ஒரு வார்த்தை கூட இதுவரை உருவாக்கப்படவில்லை. ஆனால், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை இல்லாது ஒழிக்கப்படுகின்றது எனப் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், வடக்கு, கிழக்கு இணைப்பைக் கைவிடுதல், …

Read More »

இளைஞன் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை அவசியம்: மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ். பருத்தித்துறை துன்னாலை இளைஞனின் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணை பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என்பதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனமான உள்ளதென ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துன்னாலை பகுதிக்கு விஜயம் செய்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், கொலையுண்ட இளைஞனின் குடும்பத்தாரிடம் தகவல்களை கேட்டறிந்ததோடு, பொலிஸ் நிலையத்திற்கும் சென்று தகவல்களை திரட்டியுள்ளனர். …

Read More »

சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது: சுமந்திரன்

”யாழ்.பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் மணற்கடத்தல் இடம்பெற்றால் அதனை தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். துன்னாலை இளைஞன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் மணற்கடத்தலில் ஈடுபட்டிருந்தால் சட்ட வரையறைக்குள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இளைஞனின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த …

Read More »

வடக்கு மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது

கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்கின்ற ஒருவகையான போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால், குறித்த சந்தேகநபர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகிப்பதாக குறித்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Read More »