Sunday , June 22 2025
Home / தமிழ்மாறன் (page 107)

தமிழ்மாறன்

உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு பைஸர் முஸ்தபாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை

உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாக கூறியுள்ளதாவது, உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் தற்போதைய சட்டத்தில் சில உடனடித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சட்டத்தில் காணப்படும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னைய எல்லை மீள்நிர்ணயத்தில் காணப்பட்ட தவறுகளைத் திருத்தும் …

Read More »

நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு புதிய அரசமைப்பில் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் : சம்பந்தன்

புதிய அரசமைப்பில் ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன், வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று ஆர்.சி பெரியார் அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது, அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் …

Read More »

காங்கிரஸின் அபிவிருத்திக்கே மலையகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது : ஆறுமுகன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலத்தில் மலையகத்தில் கொண்டுவந்த அபிவிருத்திக்கே தற்போது அடிக்கல் நாட்டிவருவதாக இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார். தோட்ட சேவையாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த கூட்டமொன்று கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கத்திடம் 23 தடவைகள் பேசிதான் 4, 000 வீடுகள் பெற்றுக்கொண்டோம். அதற்கு …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை இல்லை : கருணா அம்மான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை இருந்தால் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நல்லாட்சியிடம் கூறி நிறுத்திக் காட்டுங்கள் என முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சவால் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய கல்குடா – கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாங்கள் ஆட்சியிலிருந்தபோது புதிய மதுபானசாலைகள் …

Read More »

போராட்டத்தை கடற்படையினருக்கு அஞ்சி கைவிடப்போவதில்லை: முள்ளிக்குளம் மக்கள்

கடற்படையினரின் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சி நாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என பூர்வீக காணிகளுக்காக மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களை புகைப்படம் எடுத்து கடற்படையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்ற நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்களின் மண்மீட்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) மூன்றாவது …

Read More »

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இரு தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், நீதி விசாரணை கோரியும் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மட்டக்கயப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், என்.சிறீநேசன், எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா, மாகாண அமைச்சர் ரி.துரைராஜசிங்கம் மற்றும் பெருமளவான …

Read More »

யுத்த பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை நிறைவேற்ற வேண்டிய கருமங்கள் ஏராளம்: பிரித்தானியா

யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் Baroness Joyce Anelay தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த சில முக்கிய விடயங்களை ஐக்கிய நாடுகள் …

Read More »

நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய கல்வி அலகு

சந்திரிகா குமாரதுங்க

மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை வளர்பதை நோக்காகக் கொண்டு ஸ்ரீலங்காவில் புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான கல்வி அழகினை ஆரம்பிக்கவுள்ளது. இந்த பாட அழகு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் …

Read More »

கேகாலை சிறைச்சாலைக்கு குண்டு துளைக்காத பேருந்து: சுவாமிநாதன் அறிவிப்பு

கேகாலை சிறைச்சாலையின் உபயோகத்துக்கு, குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்தே குண்டு துளைக்காத பேருந்தை கொள்வனது செய்வது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 10 நாட்களுக்குள் குறித்த குண்டு துளைக்காத பேருந்து, கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறான பேருந்து ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாயின் …

Read More »

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன்

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சை

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன் “இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதுடன், இந்திய ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், லைக்கா …

Read More »