மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை ஸ்ரீலங்கா கடற்படையினரிடமிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி கிராம மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மன்னார் – விடத்தல்தீவு கிராம மக்கள் நேரடியாக விஜயம் செய்து ஆதரவு வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டம் முள்ளிக்குளம் கிராம …
Read More »புலிகளை வேவுபார்த்த விமானம்; முதன்முறையாக ஏற்றுக்கொண்டது இந்தியா
வன்னிப் போரின்போது ஸ்ரீலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இதனைத் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. ஐ.என்.எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 …
Read More »வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்கும் விடயமானது இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானதாக அமையும் என்று இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற …
Read More »உண்ணாவிரதத்தை கைவிட்ட விமல் வீரவன்ச
சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கூறினார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டடுள்ளார். பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
Read More »வடமாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தி
வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ …
Read More »புலம்பெயர் தமிழரால் யாழ் இசைக்கருவிகள் அன்பளிப்பு
யாழ்ப்பாணத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜி என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது . யாழ் பொது நூலகத்தில் பிரதம நூலகர் சுகந்தி தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் இந்த யாழ் இசைக்கருவி கையளிக்கப்பட்டது. இந்த யாழ் இசைக்கருவிகள் யாழ். பொது நூலகத்திற்கும் மற்றொன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதப்படும் யாழ் இசைக்கருவி தற்போதுவரை …
Read More »எமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வையுங்கள்
காணமல்போனோர் விடயத்தை உதாசீனம் செய்யாது, தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் …
Read More »சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க
சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை, பௌத்த மதகுருமாரின் ஆசி வழங்கும் நிகழ்வுடன் இந்தப் பதவியேற்பு இடம்பெற்றது. சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த உள்ளிட்ட உயர்நிலை இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இராணுவத் தலைமை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக …
Read More »ஐ.நாவில் அரசின் செயற்பாடு குறித்து விசேட விவாதம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் செயற்பாடு என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விசேட விவாதத்தை நடத்துதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புதல் வழங்கியுள்ளார். கூட்டு எதிர்கட்சி விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த விவாதத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் …
Read More »நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது அனைவரும் ஒன்றிணைவோம்
உறவுகளை இழந்து தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுடனான சந்திப்பின்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் கவனயீர்ப்பு பேராட்டம் இன்று …
Read More »