Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 101)

தமிழ்மாறன்

இந்தியப் பெருங்கடல் மீது கவனம் செலுத்தும் ஜேர்மனி – தூதுவர்களுக்கான கூட்டம் சிறிலங்காவில்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை, புதிய மூலோபாய மற்றும் இராஜதந்திர முன்னுரிமைக்குரிய பகுதியாக கருதி, ஜேர்மனி தனது நாட்டு தூதுவர்களுக்கான கூட்டம் ஒன்றை முதல் முறையாக சிறிலங்காவில் ஒழுங்கு செய்துள்ளது. இன்று இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஜேர்மனியின் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிராந்தியத்தை வடிவமைப்பதில் உலகளாவிய போட்டி நிலவுகிறது. பெர்லின் ஒரு பிரதான வணிக சக்தி என்ற வகையில், இந்தியப் பெருங்கடலில் உறுதிப்பாட்டையும், சட்டத்தையும் உறுதிப்படுத்துவதில் ஆர்வம் …

Read More »

2017 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ்மொழிதின விழா வடக்கில்

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கல் விழா 2017 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு இம்முறை வட மாகாணத்தில் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வட மாகாண கல்விப்பணிமனையில் நடைபெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண மேலதிக …

Read More »

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற வகையில், ஐந்து பேருக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தினால் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆறு மாதங்கள் தொடக்கம் 19 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2003தொடக்கம் 2010 …

Read More »

மாறி வரும் இலங்கைத் தீவின் வரைபடம்

இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்து வருகிறது கொழும்பு துறைமுக நகரம் அல்லது நிதி நகரத்தை அமைக்கும் பணிகளால் இலங்கைத் தீவின் உருவ வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இலங்கைத் தீவின் புதிய வரைபடத்தை வரையும் பணியில் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். துறைமுக நகரத் திட்டம் நிறைவடைந்த பின்னரே, இலங்கைத் தீவின் இறுதி வரைபடம் வெளியிடப்படும். தற்போது துறைமுக நகரப் பணிகள் நடந்து வரும் நிலையில், கொழும்பில் காலிமுகத்திடலை …

Read More »

வில்பத்து தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் தவறானது ; ஸ்ரீநேசன்

சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு அனைத்து சிறுபான்மை சமூகங்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அநீதிகளுக்கு எதிராக போராடும் பொழுது அதனை பொருட்படுத்தாது செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு – குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய …

Read More »

பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்ட சமஷ்டி முறையை மைத்திரி எதிர்ப்பது ஏன்

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம், கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் யுத்த குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்க முடியாது என தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் …

Read More »

சிறுபான்மையினரின் அபிலாசைகளை பெற சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்

சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு …

Read More »

விமல்லின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இரண்டு நீதியரசர்களில் ஒருவர் சமூகமளிக்காத காரணத்தினால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபரை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று …

Read More »

GSP+ வரிச்சலுகை: இறுதி தீர்மானம் மே மாதம் 15ஆம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவது குறித்த அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பிய ஆணைக்குழுவால் ஐரோப்பிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கை அரசு மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் 27 நிபந்தனைகளில் அரசு முன்னேற்றம் …

Read More »

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் இன்று கொழும்பு வருகிறார்

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இன்று 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை இவர் இலங்கையில் தங்கியிருப்பார். இதன் போது வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, அவுஸ்ரேலியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் அவுஸ்ரேலிய அமைச்சர் …

Read More »