தேர்தல் ஆணையம் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சி தேர்தல் நடைபெறும் – பாண்டியராஜன்
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் உள்ளது என்று மா. பாண்டியராஜன் கூறினார்.
அய்யா வைகுண்டரின் அவதார தின விழா நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் நடைபெற்றது.
இதையொட்டி சென்னை பாடியில் இருந்து அய்யா வைகுண்டர் தேரோட்டம் நடந்தது. தேர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்பத்தூரில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலை அடைந்தது.
இந்த தேரோட்ட ஊர்வலத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் உள்ளது. பிரச்சினையும் ஏற்படும்.
தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சி தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.




