Sunday , June 29 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் – விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது: நீதிபதிகள் அறிவுறுத்தல்

கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் – விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது: நீதிபதிகள் அறிவுறுத்தல்

கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் உள்ளதால் விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய சிறு-குறு கடன்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூன் 28-ந்தேதி தமிழ் நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அர சாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக் கும் விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் மற்றும் நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது.

இந்த அரசாணை பார பட்சமாக உள்ளதாகவும், இதனை ரத்து செய்து, அனைத்து விவசாயிகளின் பெயரில் உள்ள கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை யில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யா கண்ணு வழக்கு தொடர்ந் தார். அந்த வழக்கு மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத் திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் சலுகை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆனால் 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த சலுகை கிடைப்பது இல்லை. இது பாரபட்சமானது. வறட்சியாலும், இயற்கை சீற்றத்தினாலும் ஏற்படும் பாதிப்பு அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவானது தான்.

எனவே, 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற உத்தரவை ரத்து செய்து அனைத்து விவசாயிகளுக்கும் இந்த சலுகையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரித் தார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பி டாமல் தள்ளிவைத்து உத்தர விட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அந்த தீர்ப்பில் கூறியிருப்ப தாவது:-

தமிழக அரசு சலுகை வழங்கும்போது அதில் பாரபட்சம் காட்டக்கூடாது. 5 ஏக்கர் நிலத்தை வைத் திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் கடன் மற்றும் பயிர் கடன்களை ரத்து செய்வதை ஏற்க முடியாது.

எனவே, 5 ஏக்கர் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்த உத்தரவை மட்டும் ரத்து செய்கிறோம். 3 மாதத்திற்குள் தமிழக அரசு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இதுதொடர்பான அரசாணையில், 5 ஏக்கர் விவசாய நிலத்துக்கு மேல் வைத்திருக்கும் விவசாயி கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் பயிர் கடன் மற்றும் நகைக்கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும்.

அதாவது கூட்டுறவு வங்கி களில் பயிர் கடன் மற்றும் நகைக் கடன் வாங்கியுள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே, இந்த 3 மாத கால இடைவெளியில் விவசாயிகள், வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …