Sunday , May 19 2024
Home / விளையாட்டு செய்திகள் / ஐ.பி.எல். போட்டி – ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

ஐ.பி.எல். போட்டி – ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் ஏழாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர்.

ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சகாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது சகா 22 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தவான் 28 பந்துகளில் 8 பவுண்ட்ரியுடன் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும், ஷகிப் அல் ஹசன் 12 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். அப்போது ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

Check Also

Kelvi Neram 05-04-2018 News7 Tamil Show

Watch Kelvi Neram News 7 Tamil tv shows 05.04.18 , News 7 Tamil TV show …