அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேசிவருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
சென்னை ராயப்பேட்டையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று, இரட்டை இலை சின்னத்தை மீட்பேன். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.ஆர்.கே நகரில் யார் பணம் கொடுக்கிறார்கள் என மக்களிடம் கேட்டுபாருங்கள். தமிழகத்தில் அ.தி.மு.கவை ஒழித்து விட வேண்டும் என சில செயல்படுகிறார்கள். ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.ஆர்.கே.நகரிலேயே தங்கியிருந்து, வாரத்தில் 5 நாட்கள் மக்களை சந்திப்பேன. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.