வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து […]
Tag: Tamil
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி
மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி […]
முக்கிய கட்சிகளை பின்தள்ளினார் கமல்ஹாசன்?
இந்திய நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அ.ம.மு.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை விட முன்னிலை வகிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்படி பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் […]
சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி
கோவை தளமாக கொண்ட, வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பல்களான, USS Spruance மற்றும் USS Stockdale ஆகியன, கடந்த ஒக்ரோபர் மாமத்தில் இருந்து இந்தோ-பசுபிக் மற்றும் மத்திய கிழக்கில் பணிகளை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் தளம் திரும்பியுள்ளன. John C. Stennis விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம்பெற்றிருந்த இந்த நாசகாரி கப்பல்களில் ஒன்றான, USS Spruance தெற்கு அரபிக் கடலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, நீர்மூழ்கி எதிர்ப்பு […]
தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில்?
தேசிய தௌஹீத் ஜமாத் திவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் உள்ளதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பணியாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்ட போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. சஹஜான் என்ற குறித்த சந்தேக நபர், தௌஹீத் ஜமாத் அமைப்பு பற்றிய பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கடமையாற்றிய சஹ்ரான் ஹாசீம் மற்றும் பிரதேச மட்ட தலைவர்களினால் […]
யாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்!
வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது. மேற்படி ஆலய நிர்வாகத்தை தம்வசம் வைத்திருக்கின்ற சிலர் அப்பகுதியில் உள்ள மக்களை சாதீ ரீதியில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதன் ஒரு கட்டமாக கடந்த வருடம் (2018) வருடாந்த […]
வன்முறைச் சம்பவம் – 32 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!
மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 32 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களிலிருந்து மீள முன்னர், கடந்த 13ஆம் தேதி திங்கட்கிழமை வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின குருநாகல், சிலாபம், […]
கிளிநொச்சியில் இராணுவத்தினர் ஊர்வலம்
“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை
குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சங்ரிலா விருந்தகத்தில் குண்டு தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவர் சஹ்ரான் ஹஷீம் என மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார். சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் […]
முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளின் சடலம் மீட்பு
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்க்கபட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மண்டையோடு சிதைவடைந்தநிலையில் […]




