வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் – சுமந்திரன் வடக்கு, கிழக்கு மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நோக்கில் விசேட பொருளாதார பொறிமுறை திட்டம் ஒன்றை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்க்கான எமது அழுத்தங்களும் நகர்வுகளும் தொடரும் அதேவேளை, …
Read More »பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு மலையக தலைமைகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுயான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் சிறுபான்மை மக்கள் இந்த …
Read More »யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதுதான் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வட, கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து வடக்கு,கிழக்கில் இன்று பல்வேறு தரப்பாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச்சந்தி பசுமை பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னாரிலும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த …
Read More »