மறுசீரமைக்கப்பட்ட புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய அரசின் பங்காளிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு …
Read More »மாகாணசபைத் தேர்தலில் இழுத்தடிப்புகள் இல்லை! – ஒரேநாளில் நடக்கும் என்கிறார் அமைச்சர்
மாகாண சபைகளுக்குரிய தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும், அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சி சபைத் தேர்தலானது கலப்புமுறையிலேயே நடத்தப்படும். 70 வீதம் தொகுதிவாரியாகவும், 30 வீதம் விகிதாசார முறைமையாகவும் இருக்கும். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அதன்பின்னர் தேர்தல் நடத்தப்படும். …
Read More »