பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது என்ற ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அத்துடன், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் …
Read More »போர்க்குற்ற விசாரணை இலங்கையில் படுதோல்வி! – அரசின் போக்குக் குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் காட்டம்
ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முடக்க நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிகின்றதென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைககள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் பணிமனையில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் …
Read More »அடுத்தவாரம் இலங்கை வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்
மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அடுத்தவாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜூலை 10ஆம் திகதி தொடக்கம், 14 ஆம் திகதி வரையான ஐந்து நாட்கள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்காவில் தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை மற்றும் சட்ட வரையறை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும், தான் எதிர்பார்த்திருப்பதாக பெண் …
Read More »