வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்னவை நீக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் கையெழுத்திட்ட மகஜரை மாகாண ஆளுநர் ஏற்க மறுத்துள்ளார். ஏற்கனவே முதலமைச்சராக இருந்த எஸ்.எம்.ரஞ்ஜித்திற்கு குறித்த பதவி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து இன்று (திங்கட்கிழமை) இவ் உறுப்பினர்கள் மகஜரை கையளிக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த மகஜரை ஏற்பதற்கு ஆளுநர் பி.பி.திசாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Read More »