மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் முப்படையினரும் இணைந்து கடும் சோதனைகளையும்,தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர் இணைந்து வீதிகளை மறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் வீட்டில் உள்ள உடமைகளை முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலினை செய்து வருகின்றனர்.
Read More »