வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த திட்ட தொடர்பான சாத்திய கூறுகளை கண்டறியுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் …
Read More »குழந்தகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது
அமெரிக்காவில் 13 குழந்தைகளை வீட்டுக்குள் பிணைக்கைதிகள் போல அடைத்து, சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் டேவிட் ஆலன் டுர்பின்(57), லூயிஸ் அன்னா டுர்பின் (49) என்ற தம்பத்தியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதிலிருந்து 29 வயது வரையிலான 13 குழந்தைகள் உள்ளனர். பெத்த பிள்ளைகள் என்றும் பாராமல் தங்களது 13 குழந்தைகளையும் படுக்கையில் சங்கிலியால் கட்டிப்போட்டு பிணைக்கைதிகள்போல அடைத்து …
Read More »பாலம் இடிந்து விழுந்ததில் 9 கட்டுமான தொழிலாளர்கள் பலி
கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்க மாகாணம் கொலம்பியாவில் சிரஜாரா என்ற இடத்தில் தலைநகர் பகோட்டாவையும், வில்லாவிசென்சியோ நகரையும் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பாலம் இடிந்து விழுந்தது …
Read More »எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான்
வல்லரசு நாடுகளுடன் செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டின. ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இதனால் பொருளாதார தடை படிப்படியாக விலக்கிக்கொள்ள இந்த …
Read More »அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமான வார்த்தையால் திட்டிய டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெளியிட்ட முக்கிய கோஷம், “அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்” என்பதாகும். இதற்கான நடவடிக்கையிலும் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விவகாரத்திலும் முன்னுரிமை கொடுத்துதான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் டொனால்டு …
Read More »எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ஜென்னத் ஜஸ்டர் கூறிஉள்ளார் இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஜென்னத் ஜஸ்டர், பாகிஸ்தானுக்கு பயங்கரவாத விவகாரத்தில் மறைமுகமான தகவலை தெரிவித்து உள்ளார். அமெரிக்கா பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்து பயங்கரவாத இயக்கங்கள் நிதிஉதவி பெறுவதற்கு தடை விதித்து பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டு …
Read More »எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையால் 5 முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சட்டம் தளர்வடைந்ததால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே பல திடுக்கிடும் சட்டங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அந்நாட்டவரிடம் அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்றும் அமெரிக்கர்களை மட்டுமே பணி அமர்த்துங்கள் என்ற …
Read More »போருக்கு அடிக்கற்கள்: வடகொரியா பகிரங்க மிரட்டல்!!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியா சமீபத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது. வட கொரியா மீதான புதிய தடைகள்: # வட கொரியாவின் பெட்ரோலிய …
Read More »ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெறக்கோரும் ஐ.நா. தீர்மானம் வெற்றி
ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் …
Read More »ரயில் தடம் புரண்டு விபத்து
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட் பகுதியிலிருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக்(AMTRACK) ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பயணம் செய்தனர். பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் …
Read More »