முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவை, எமிரேட்ஸ் எயர்லைன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நாமல் தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய செல்லுபடியாகும் அமெரிக்க விசாவை கொண்டிருந்த போதிலும், நாமலின் விஜயம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உறவினர் ஒருவரது இறுதி …
Read More »சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கவலை
இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தொடர்ந்தும் இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகள், சிறுபான்மையினருக்கெதிரான வன்முறைகள் , மத ரீதியான அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக எங்களது பரிந்துரைகளை ஏற்று, மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களை …
Read More »கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரினோம்- சுமந்திரன்
ஜெனிவாவில் இன்றைய சிறிலங்கா தொடர்பான அமர்வின் போது, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பதில் பிரதித் தூதுவர் கெல்லி கியூரியையும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் …
Read More »நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்
நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில்இ இரண்டு குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய …
Read More »ஸ்ரீதேவி மறைவிற்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீதேவி இந்தியாவில் மட்டுமின்றி உலகப்புகழ் பெற்றவர் என்பதால் அவருக்கு உலகின் பல நாடுகளில் உள்ள விஐபிக்களிடம் இருந்து இரங்கல் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன அந்த வகையில் மறைந்த ஸ்ரீதேவியின், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் தனது …
Read More »அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொள்ள தென்கொரியா செல்லும் வடகொரியா உயர் மட்ட குழு அங்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளது. நீண்ட கால பகையை கடந்து தென் கொரியாவில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தென்கொரியா சென்றது குறிப்பிடத்தக்கது. வடகொரியா அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் …
Read More »டிரம்ப் தற்பெருமைக்கு பதிலடி கொடுத்த வடகொரியா!
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது. இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவை ஒழுக்கம் கெட்ட நாடு என அமெரிக்கா விமர்சனம் செய்ததற்கு வடகொரியா பதிலளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை …
Read More »பிப்.8 வடகொரியா ராணுவ அணிவகுப்பு
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது ஆனால், இதற்கு மாறாக தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று தெரிகிறது. மேலும், இரு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைய இருப்பதாக செய்திகள் …
Read More »அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தெற்கு அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கொடியாகில் இருந்து தென்கிழக்காக 300 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்திவாய்ந்த …
Read More »கொரிய போருக்கு கட்டம் கட்டும் அமெரிக்கா
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்கா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. வடகொரியா வெளியுறவு அமைச்சக அதிகாரி பேசியதை சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு… வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் அணியில் இணைந்த 20 நாடுகளின் வெளியுறவு …
Read More »