Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 274)

இலங்கை செய்திகள்

அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து! – மஹிந்தவின் மே தின நிகழ்வே காரணம் என்கிறார் சம்பந்தன்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் …

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று முல்லைத்தீவுக்கு செல்கிறார் மைத்திரி!

பெண்களின் பாதுகாப்பை ஜனாதிபதி வாழ்த்து செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஜனாதிபதி முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த வருடம் தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய …

Read More »

மூன்று நாள் பயணமாக வடக்குக்கு ரணில்! – 19ஆம் திகதி செல்கிறார்

அரசாங்கம் வாக்குறுதி

வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி செல்லவுள்ளார். பல்வேறு சந்திப்புக்களையும், ஆராய்வுகளையும் மேற்கொள்ளும் நோக்குடனேயே அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது எனத் தெரியவருகின்றது. இந்த மாதம் 19 ஆம் திகதி மன்னார் மாவட்டத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ளார். …

Read More »

கொலையாளிகளின் பாதுகாப்பு அரணாகவே தூதரகங்களைப் பயன்படுத்தினார் கோட்டா! – மங்கள குற்றச்சாட்டு

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்

படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், கோட்டாபயவின் புதல்வர், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஆகியோர் தொடர்பிலும் அவர் தகவல்களை …

Read More »

ஆசிரிய உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிலுவையுடன் வழங்க நடவடிக்கை: இராதாகிருஸ்ணன்

ஆசிரிய உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளை நிலுவையுடன் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் சுற்றுநிருபங்கள் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தொிவித்த இராஜாங்க அமைச்சர், “கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் மேலதிக கொடுப்பனவு தொகையான 4 ஆயிரம் ரூபாவையும் சேர்த்து மொத்தமாக …

Read More »

பணிப்பகிஷ்காிப்பை அறிவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் மாலை வேளையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்பதிவு முறையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு வைத்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் …

Read More »

தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

87 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் மேல் மாடியில் 350 பேர் அமரக்கூடிய வகையிலும், வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவு என்பனவும் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் மின்னேரியா, மெதிரிகிரிய. ஹபரண, ஹிங்குராங்கொட ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கும், …

Read More »

குச்சவெளியில் சட்டவிரோத காட்டு மரக்குற்றி வியாபாரம் பொலிஸாரால் முற்றுகை!

குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்குளம் – பேராறு வனப்பகுதியினுள் நீண்டநாட்களாக சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த காட்டு மரக்குற்றி வியாபாரம் பொலிசாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வனப்பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் வெட்டி குற்றிகளாக்கப்பட்ட நிலையில் 32 முதிரைமரக்குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மேலும் நால்வர் தப்பிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் 10 தொடக்கம் 15 வட்ட அடிப்பரப்பினையுடைய 8 முத்திரை மரங்கள் …

Read More »

ஒரு வாரத்திற்குள் வித்தியா கொலை வழக்கின் குற்றப் பத்திரிகை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்றப் பத்திரிகை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அரசதரப்பு வழக்கறிஞர் நாகரத்தினம் நிஷாந்த் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கக்கோரி மேற்படி வழக்கு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒன்பது சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை …

Read More »

மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சபையில் பொது எதிரணி போர்க்கொடி!

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினர். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, 23/2 இன்கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் …

Read More »