Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 271)

இலங்கை செய்திகள்

அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்படவில்லை – ராஜித சேனாரத்ன

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் கடந்த சில நாட்களாக செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்தநிலையிலேயே, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதையும் பேசவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை அமைச்சரவை மாற்றம் கூடிய விரைவில் இடம்பெற வாய்ப்பில்லை என்று …

Read More »

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தை எட்டாது – ஐ.நா அமைப்பு கணிப்பு

சிறிலங்காவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிகச் சிறிய வளர்ச்சியையே எட்டும் என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக்கிற்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழுவின் ஆய்வு அறிக்கை- 2017 நேற்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2016ஆம் ஆண்டு 4.4 வீதமாக இருந்த சிறிலங்காவில் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டில் 4.8 வீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில், இது 4.9 வீதமாக …

Read More »

இன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடும் – சந்திரிகா எச்சரிக்கை

நல்லிணக்கம் மாத்திரமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், ‘சிறிலங்கா அதிபர், பிரதமர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட தேசிய பாதுகாப்புச் சபை தொடர்ச்சியாக கூடி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், கட்சிகள் மற்றும் தரப்புகளின் அறிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கின்றது. ஆனால், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை நல்லிணக்கத்தின் மூலமே தடுக்க முடியும். இதனை இப்போது …

Read More »

தமிழர்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசு

பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் தினத்தில் அரச நிகழ்வு ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யவுள்ளமை தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்க முடியும் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் வெசாக் கூடுகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றமை சிங்கள மயமாக்கலின் ஒரு அங்கம் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். வெசாக் …

Read More »

இந்தியாவும் இலங்கையும் கலாசாரத்தால் ஒன்றிணைந்துள்ளது: இராதா வெங்கட்ராமன்

இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்த கலை கலாசார அம்சங்களை கொண்டதாகக் காணப்படுகின்றதென கண்டி உதவி இந்தியத் தூதுவலராயத்தின் தூதுவர் இராதா வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 156 ஜனன தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவராயத்தின் பாரத கேந்திர நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வுக்கும் அறிவு மேம்பாட்டுக்கும் உந்து சக்தியாக மொழியே …

Read More »

வவுனியாவில் தீர்வின்றி தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 75ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டத்தினை இரத்துச் செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்கள் விரைவில் அரசாங்கத்தினால் வெளியிட வேண்டுமெனவும் கோரி வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து …

Read More »

அரசமைப்பில் தமது நிலைப்பாட்டில் அழுத்தம் கொடுக்கிறது மஹிந்த அணி!

அரசமைப்புத் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் உள்வாங்கப்படாவிட்டால், வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுவோம் என்று பொது எதிரணியான மஹிந்த அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு, இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது. கடந்த 3 ஆம்திகதி இடைக்கால அறிக்கையின் வரைபு, வழிநடத்தல் குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரைவு மீதான கருத்துக்களை, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் …

Read More »

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு

எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிகோத்தாவில் ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கூடுதல் பொறுப்புணர்வுடன் கூடிய கட்சியாக- இளைஞர்களின் பங்களிப்புடன் ஐதேகவை பரந்துபட்ட அளவில் நவீனமயப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் தமது தொகுதிகளில் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து தொகுதிகளில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும். எந்த தேர்தலுக்கு …

Read More »

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார். கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று சிறிலங்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்தவாரம் தீர்ப்பளித்திருந்தது. அதேவேளை, …

Read More »

மோடியின் பயணத்தில் பொருளாதார நோக்கங்கள் கிடையாது – இந்தியத் தூதுவர்

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் எந்த பொருளாதார நோக்கங்களையும் கொண்டதாக இருக்காது என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து தகவல் வெளியிட்ட இந்தியத் தூதுவர், “நாளை மறுநாள் மாலை கங்காராமய வெசாக் வலயத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, இந்தியப் பிரதமர் திறந்து வைப்பார். …

Read More »