Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 267)

இலங்கை செய்திகள்

உரிமைகளை பெறும் நாளிலேயே உண்மையான விடுதலை கிடைக்கும்: சந்திரநேரு சந்திரகாந்தன்

தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நாளிலேயே உண்மையான விடுதலைக்கான பயணம் ஆரம்பிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் இன்றையதினம் (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “”ஏழு கோடி உலகத் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளையும் அழித்த தடயமாக மே 18 முள்ளிவாய்க்கால் …

Read More »

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு: 4 பெண்கள் கைது

கிளிநொச்சி நகருக்கு அண்மையிலுள்ள கிராமப் பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபச்சார நிலையமொன்றை பொலிஸார் இன்று (புதன்கிழமை) சுற்றிவளைத்ததில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரினால் குறித்த …

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள்! – வடக்கு மாகாண சபை மேற்கொண்டுள்ளது

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான பஸ் ஒழுங்குகள் மாவட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று நினைவேந்தல் குழு சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முல்லைத்தீவு மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30, மாந்தை கிழக்கு …

Read More »

கிளிநொச்சியில் வாள்வெட்டு! – கணவன் பலி; மனைவி படுகாயம்

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த தம்பதியர் மீது இன்று பிற்பகல் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். குறித்த ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதியர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஹோட்டலின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் …

Read More »

கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை ; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியர் ஒருவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும் : மனோ கணேசன்

இந்திய பிரதமர் மோடி, மலையகம் சென்று, தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இன்னும் ஏழு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் அறிவித்துள்ளார். இவை பற்றிய பின்னணிகளை அறியாமல், புரிந்துக்கொள்ள முயற்சி செய்யாமல், இத்தகைய அறிவிப்புகளை செய்ய நரேந்திர மோடி யார்? இலங்கை இந்தியாவின் 30வது மாநிலமா? என்ற கேள்விகளை எழுப்பி, அதன்மூலம் …

Read More »

சர்வதேசத்தின் தலையீட்டின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்: சி.வி.

சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அத்தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் 3 நிமிட …

Read More »

வடக்கின் அபிவிருத்தி பணிகள் திருப்தியளித்துள்ளன என்கிறது அமெரிக்க காங்கிரஸ்

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட. மாகாணத்தில், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், வடக்கு மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றகரமான முறையில் செயற்படும் …

Read More »

காலி மாவட்ட செயலகத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

காலி மாவட்ட செயலகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே காலி மாவட்ட செயலகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத், இஸ்லாம் மதத்திற்கு ஜிந்தாபாத், முஸ்லிம்களுக்கு ஜிந்தாபாத், பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. குழுவிற்கு ஜிந்தாபாத் என அந்த இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. …

Read More »

இந்தியா தெற்கிற்கு வழங்கினால் சகோதரத்துவம் மலையக தமிழர்களுக்கு வழங்கினால் இனவாதமா?

இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கின்ற பொழுது அதனை ஒரு சிலர் இனவாத கண் கொண்டு பார்க்கின்றார்கள்.ஆனால் இந்தியாவில் இருந்து வைத்தியர்கள் இங்கு வருகின்ற பொழுது அவர்களிடம் வைத்திய சேவையை பெற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.எத்தனையோ இந்திய வைத்தியர்கள் இன்று இலங்கையில் பல சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பல உயிர்களை பாதுகாக்கின்றார்கள்.ஆனால் மலையக பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து அழைப்பதை ஒரு …

Read More »

உழவு இயந்திரத்துடன் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாப மரணம்!

வவுனியா, புளியங்குளம், பூதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் இன்று பிற்பகல் உழவு இயந்திரத்துடன் ரயில் மோதியதில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற ரயில், பூதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடந்த உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியான பூதூரைச் சேர்ந்த ஜெகநாதன் ரவீதரன் (வயது – 20), உதவியாளரான புளியங்குளத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கீர்த்தீபன் (வயது – 21) …

Read More »