Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 250)

இலங்கை செய்திகள்

பல்டி அடித்தது வைத்தியர் சங்கம்! கைவிடப்பட்டது பணிப்பகிஷ்கரிப்பு!!

நாடுதழுவிய ரீதியில் இன்றுமுதல் தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் நேற்றுக் கொழும்பில் ஏற்பாடுசெய்யப்படிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:- “சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்தின் ஒருபகுதியாக நாளை (இன்று) முதல் மேற்கொள்ளப்படவிருந்த நாடுதழுவிய …

Read More »

புதிய அரசமைப்பு: அஸ்கிரிய பீடத்தின் எதிர்ப்பானது தமிழர் மீதான பல்குழல் தாக்குதல்! – சபையில் சிறிதரன் எம்.பி. சீற்றம்

“புதிய அரசமைப்புக்கு அஸ்கிரிய பீடம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இது தமிழர் மீதான பல்குழல் தாக்குதலாகும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் அங்கு வலுக்கட்டாயமாக …

Read More »

தேசிய அரசுடன் மஹிந்த இணைந்தால் நல்லதாம்! – அமைச்சர் வசந்த

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேசிய அரசுடன் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாட்டைத் துரிதமாக முன்னேற்றிவிடலாமே.” – இவ்வாறு ஆசைப்படுகின்றார் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இந்தத் தேசிய அரசில் அனைவரும் இணைந்து இந்த நாட்டின் அபிவிருத்திக்காக வேலை செய்யவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தகூட எம்முடன் இணையவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். மைத்திரி அணி, …

Read More »

வித்தியா கொலை விவகாரம்: மரபணு அறிக்கை தாக்கல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மரபணு அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் யாவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றினால் பாரப்படுத்தப்பட்டது. நேற்றைய தின சாட்சியப் பதிவுகள் இரவு 7 …

Read More »

அமெரிக்காவுடனான உறவு வலுப்பெற்றுள்ளது: ஜனாதிபதி மைத்திரி

இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் உத்வேகம் பெறும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு …

Read More »

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியின் செயலாளராக, இலங்கையின் மூத்த அரச உத்தியோகத்தர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய செயலாளரின் பணி, அரச சேவைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமையுமென ஜனாதிபதி தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்து வந்து பீ.பி.அபேகோன் கடந்த மாதம் 30ஆம் திகதி …

Read More »

தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்? – யாழில் கலந்துரையாடல்

‘தடுமாறாத தமிழர்களிற்கு தலைமை ஏற்பது யார்?’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கருத்துப்பகிர்வு கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இந்த கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். குறித்த கருத்துப்பகிர்வு குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்- ”இன விடுதலைக்கான அரசியல் பயணத்தில் தமிழ் மக்கள் பல்வேறு விதமான …

Read More »

மட்டக்களப்பில் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்கான பயிற்சி: ஸ்ரீபத்மநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் சுமார் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறிகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். …

Read More »

சர்வதேச நீதிபதிகள் இலங்கை வருவது உறுதி! – கூறுகின்றார் மஹிந்த

“நாட்டை இரண்டாகப் பிரிக்கும் புதிய அரசமைப்பும், படையினரைத் தண்டிக்கும் சர்வதேச நீதிபதிகள் குழுவும் வரப்போவது உறுதி” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த எமது நாடு இன்று பயங்கரமான ஒரு நிலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் சதி வலைக்குள் சிக்கி நாடு இப்போது சீரழிந்துகொண்டிருக்கின்றது. நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. புதிய அரசமைப்பு நாட்டை இரண்டாகப் …

Read More »

வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தனிநாட்டை அமைப்பதற்குத் திட்டம்! – மஹிந்த அணி எம்.பி. விமல் குற்றச்சாட்டு

தனிநாட்டுக்கான அடித்தளத்தை இடுவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோருகின்றன என்றும், அரசமைப்பில் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கண்டி தபாலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ‘சல்லாபிக்கும் அரசும் துஷ்பிரயோகிக்கப்படும் இலங்கை மாதாவும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “போரை …

Read More »