Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 208)

இலங்கை செய்திகள்

முச்சக்கர வண்டி வாங்க நினைத்தால் முந்திக்கொள்ளுங்கள்!

“நாட்டில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கும் அதிகமான விபத்துக்களுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம். இவற்றைத் தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி நிதியமைச்சிடம் கேட்டிருக்கிறேன். “மேலும், முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். “பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கும் வகையில், வெகு விரைவில் மின்சாரப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் விடப்படும்.” இவ்வாறு …

Read More »

65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை

கிடைக்கப்பெறும் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. அப் புள்ளிவிபர தகவலின் படி 2016 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மொத்தமாக 2036 ஆகும். இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 1686ம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 16 வயதிற்குட்பட்ட யுவதிகள் சுய …

Read More »

மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில்

மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக இறை நம்பிக்கையுடனும், இறை சிந்தனையுடனும் வாழ்வதற்கும்,எந்த ஒரு மதத்தின் சின்னங்களை உடைத்து சேதப்படுத்துவதற்கும் யாரும் அனுமதிக்க கூடாது என மன்னார் மாவட்ட அற நெறி பாடசாலை இணையத்தின் தலைவர் மஹாதர்மகுமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நேற்று(17) திங்கட்கிழமை இரவு பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பிலும் மக்கள் மத்தியில் அமைதியினை நிலை நாட்டும் வகையிலும் மன்னார் உப்புக்குளம் அம்மன் ஆலையத்தில் விசேட …

Read More »

நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை – ஜெனிவாவில் சுமந்திரன்.

திரு.சுமந்திரனின் இன்றய பேச்சு அதிர்ச்சியை அளித்தது. இன்று ஸ்விஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ …

Read More »

விரைந்து பரவுகிறது டெங்கு வடக்கில் 7,000 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் இதுவரை 7 ஆயிரத்து 8 பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மாகாணத் திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும், 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மாவட்ட சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் பிரிவின் …

Read More »

எந்தநேரத்திலும் ஆணைக்குழு முன் விளக்கமளிப்பதற்கு நான் தயார்! – பிரதமர் ரணில் தெரிவிப்பு

“பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு விளக்கமளிக்க, எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கின்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ரவி …

Read More »

உண்ணாவிரதக் கைதிகளை நேரில் பார்த்துக் கதறியழுதனர் உறவுகள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அவர்களது உறவுகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். உண்ணாவிரதக் கைதிகள் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் சிறைச்சலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நேற்று மாலை உறவுகள் பார்வையிட்டனர். கைதிகளைக் கண்டவுடன் அவர்களது உறவுகள் கதறி அழுதனர். கைதிகளும் விம்மி விம்மி அழுதனர். வவுனியா மேல்நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கை அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து …

Read More »

13 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் எனத் தெரிவித்து அச்சிறுமியின் தந்தைஈச்சங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருபவை வருமாறு:- வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வசித்துவந்த குடும்பமொன்றின் 13 வயதுச் சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாயார் மூன்று தடவைகள் தனியார் வைத்தியசாலையில் ஆலோசனை பெற்றிருந்தார். சிறுமி உடல் பலவீனமாகவுள்ளார் எனத் தெரி விக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதில் திருப்தியடையாத தாயார் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று …

Read More »

பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது! – மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“பேய்கள், பிசாசுகள் வந்துவிடும் என்பதற்காகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பம், துயரம், அவலத்தைச் சுமந்தபடி வாழமுடியாது. அவர்களது துயரத்துக்கு ஒரு தீர்வு விரைந்து எட்டப்படவேண்டும். இனியும் அவர்கள் காவல் இருக்கமுடியாது.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். “தன்னைப் பலவீனப்படுத்தினால் உண்மையில் பலம் பெறப்போவது பேய்தான்” என்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »

உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு சேர்க்கப்பட்டுள்ளபோதிலும் அங்கிருந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தைத் …

Read More »